வியாழன், 25 ஆகஸ்ட், 2011

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவுத்திறன் – உளவியல் அலசல்

நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனை த்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம்.
மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடை யாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனை யை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ் வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் தீர்வுகாணும் தன் மை ஆகியவற்றையும் நுட்பமாகப் பாதிக்கின்றன.
ஒரு வளர்ந்த மனிதனின் மூளையானது சுமார் 11,000 மில் லியன் மூளை செல்கள் அல் லது நியூரான்களைக் கொண் டுள்ளது. நியூரானுக்கு நடு வில் செல் உடல் இருக்கிறது. அவற்றில் மெல்லிய இழை கள் இருக்கின்றன. இந்த இ ழைகளின் மூலமே, நியூரான் கள் ஒன்றுடன் ஒன்று இணை க்கப்பட்டு ள்ளன. இந்த 11,000 நியூரான்களின் உள் இணை ப்புகள் மற்றும் உப பகுதிகளி ன் எண்ணிக்கைக்கு கணக்கில்லை என்பதால், நமது மூளை யின் திறனுக்கு அளவில்லை. எனவே மனித மூளையான து, வாழ்நாளில் நடக்கும் அனைத்து விஷயங்களையுமே பதிவு செய்து கொள்கிறது.
இந்த பதிவுசெய்யும் செயல்பாடு பற்றி சிலவிதமான கோட் பாடுகள் உள்ளன. இது எலக்ட்ரி கல் செயல்பாடு எனவும், ரசா யன செயல்பாடு எனவும் அல் லது இரண்டும் கலந்தது என வும் சொல்லப்படுவதுண்டு. இந் த பதிவு செய்தலானது, ஒவ் வொரு விதமான செயல்பாடு களுக்கும் ஏற்றவகையில் மாற் றம் செய்யப்படுவதாக நம்பப்படு கிறது. நினைவானது மூளை யின் வெவ்வேறு பகுதியில் அத ன் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு பதியப்பட்டாலும், அது முழுமை என்ற நிலையில்தான் இருக்கிறது என்ற கருத்துக்கு ஆதா ரம் இருக்கிறது. இந்த நிலையை ஹோலோகிராமுடன் ஒப் பிடலாம்.
நமது மூளையானது எவற்றையெல்லாம் சேகரித்து வைக்கி றது என்று பார்த்தால், நாம் பார்ப்பது, கேட்பது, உணர்வது என அனைத்தை யும் அது பதிவு செய்கிறது. நாம் தூங் கும் போது எதையும் அதிகமாக பதிவு செய்ய முடியாததற்கு கார ணம், நமது புலன்கள் அந்த சமயத்தில் எதையும் அறிதாக வே உணர்கின்றன.
முடியும் என்று நம்புங்கள்
ஒரு செயலில் நமக்கு வெற்றி கிடைப்பதற்கான முதல் படி யே, அதை நம்மால் வெற்றிகர மாக செய்ய முடியும் மற்றும் அதை செய்வதற்கான திறன் நம் மிடம் உள்ளது என்று நம்பு வது தான். இறைவன், உங்களுக்கு அற்புதமான சக்தி கொண்ட மூளையை கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங் கள். விஞ்ஞானிகள் கடுமை யான முயன்றும் மூளையின் செயல்பாட்டு அற்புதத்தையும், அதன் திறனையும் புரிந்து கொ ள்ள முடியவில்லை. மூளையா னது, உங்கள் வாழ் வின் சிறியது முதல் பெரியது வரை அனைத்தையும் நினைவில் கொள் ளும் திறன் பெற்றது.
ஒரு விஷயத்தை பலரும் செய்கிறார்கள், உங்களைவிட வயதானவர்கள் செய்கிறார்கள், வயதில் குறைந்தவர்கள் செய்கி றார்கள், உங்களைவிட குறை வாய் படித்தவர்கள் செய்கிறார் கள் என்ற நிலை இருக்கையில், உங்களாலும் முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். மேற்கூறிய நபர்கள் சிறந்த நினைவாற்றலைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், ஏன் உங் களால் முடியாது என்று எண்ண வேண்டும். இந்த நம்பிக்கை தான் நம்மை எதையும் சாதிக்க வைக்கும் மற்றும் நமது நினைவுத்திறனை மேம்படுத்த உதவும்.
நினைவாற்றல் மேம்பாடு வாழ்க்கையின் அம்சம்
ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை இல்லையெனில், அவனால் எதை யும் சாதிக்க முடியாது. நம்பிக் கை இருந்தால் ஒரு மலையைக் கூட நகர்த்தி விடலாம் என்பது ஒரு பழ மொழி.
வாழ்க்கையில் எதுவுமே எளிதாக கிடைத்து விடுவதில்லை. எளிதாக கிடைத்துவிட்டால், அது நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. ஒரு விஞ்ஞானி யோ, வரலாற்று அறிஞரோ, இசை க் கலைஞரோ, அரசியல்வாதி யோ யாராக இருந்தாலும், தமது துறையில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை, வெற்றிக்காக வே அர்ப்பணிக்கின்றனர்.
ஒருவர் தனது உடலை ஆரோக்கி யமாக வைக்க விரும்பினால், மு றையான உணவுமுறை, உடற் பயிற்சி, வாழ்க்கை முறை ஆகிய வற்றை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றுக்காக அவர் தனது வாழ் க்கையையே அர்ப்பணிக்க வேண் டியதில்லை. ஆனால், தனது வாழ்க்கை முழுவதும் அந்த நடை முறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அவற் றை வாழ்வின் அம்சங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது போலத் தான் நமது நினைவுத் திறனும். நினைவுத் திற னை மேம்படுத்துவதற்காக நீங்கள் உங்களின் வாழ்க்கை யையே அர்ப்பணிக்க வேண்டியதில்லை. நினைவுத்திறன் மேம்பாட்டு வழிமுறைகளை வாழ்க்கையின் அம்சங்களாக மாற்றி க்கொள்ள வேண்டும்.
தமது முயற்சிகளை நாளை துவங்கலாம், அடுத்த வாரம் துவங்கலாம், அடுத்த மாதம் துவ ங்கலாம் அல்லது அடுத்த வருடம் துவங்கலாம் என்று பலர் தள்ளிப் போடுகின்றனர். ஆனால், இது போன்று தள்ளிப் போடுவதால், ஏராளமானோர், கடைசிவரை எதையும் செய்யாமலேயே இரு ந்து விடுகின் றனர். எனவே எதை தொடங்கினாலும் உடனே துவங் குங்கள்.
தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள்
கடவுள் எப்போதுமே ஓரவஞ்ச னை காட்டுவதில்லை. ஒருவரை சிறந்தவராகவும், இன் னொருவரை தாழ்ந்தவராகவும் படைப்பதில்லை. ஒவ்வொ ருவருக்கும் மூளையின் திற னில் வித்தியாசம் இருப்பதி ல்லை, ஆனால் அதன் விரு ப்ப செயல்பாட்டில் வேறுபாடு இருக்கிறது. ஒருவரால் சிறப் பாக செய்ய முடிந்த ஒரு விஷயத்தை இன்னொருவ ரால் செய்ய முடி யாது. அவர் வேறொரு விஷயத்தை சிறப் பாக செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பார்.
நீங்கள் உங்களின் நினை வாற்றலை மேம்படுத்த விரும்பி னால், முதலில் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விட் டொழியுங்கள். உலகின் மிக ப்பெரிய மேதைகள் பலர், மிக மோசமான ஞாபக மறதி நோயுள்ளவர்கள் (உதாரணம்-ஐன்ஸ்டீன்) என்பதை நீங்கள் படித்தி ருப்பீர்கள். எனவே நி னைவுத்திறன் குறைபா டு என் பது அறிவுத் திற ன் தொடர்பானதல்ல. அதேசமயம் அது வாழ்க் கைக்கு தேவையான விஷ யமாகவும் இருக்கிறது. எனவே முறையான பயிற்சி களின் மூலம் உங்களின் குறையை சரிசெய்யலாம்.
நம்பிக்கையுடன் இருங்கள்
நம்பிக்கையில்லா மனிதன் எதையுமே சாதிக்க முடியா து. நம்பிக்கை என்பது ஒரு போட்டியில் உங்களின் எதி ராளியை வெல்வதற்கு மட் டும் தேவையான அம்சம் அல்ல, உங்களின் உள்ளார் ந்த பயம் மற்றும் சந்தேகங் களைப் போக்கு வதற்கும் நம்பிக்கை அவசியம். ஓட்டுநர் பயிற்சியை முடி த்த பிறகு, தனியாக சாலையில் வண்டியை ஓட்ட வேண்டுமெனில் நம் பிக்கை வேண்டும். முதன் முத லில் ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வேண்டுமெ னில் நம்பிக் கை வேண்டும். அனைத்து எதிர்மறை சிந்தனைகளுமே சுய அழி வுக்கு வித் திடுபவை. ஒரு விஷயத்தை உங்களால் நினைவில் வைக்க முடி யாது என்று நீங்கள் நினை த்தால், உங்களின் மூளைக்கு “அதை மறந்துவிடு” என்று கட் டளைப் போகிறது. எனவே எதிலுமே நம்பிக்கை வேண்டும்.
பிரச்சினை என்ன என்பதைக் கண்டறியவும்
உங்களுக்கு பொதுவில் நல்ல நினைவுத்திறன் இருக்கும். ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்கள் உங்களுக்கு நினை வில் நிற்காமல் போகும். அவ ற்றை நினைவிற்கு கொ ண்டு வருவதில் நீங்கள் எப்போதுமே சிரமப்படு வீர்கள். சிலருக்கு, பெய ர்கள் மறந்து போகும். சிலருக்கு இடங்கள் மறந்து போகும். சிலருக்கோ, எண்கள் மறந்துபோகும் மற்றும் சிலருக்கு ஆட்களின் முகங்கள் மற ந்துபோகும். சிலருக்கு நல்ல விஷய ஞானம் இருந்தும், அவர்களால் ஒரு மேடையில் தமது கருத்துக்களை தெளிவா க எடுத்துரைக்க இயலா து. சிலருக்கு எவ்வளவு கடினப்பட்டு படித்திருந் தாலும், தேர்வு அறை யில் பதில்களை நினை வில் கொண்டுவந்து எழு து வதில் சிரமம் இருக்கும்.
இத்தகைய குறைபாடுகள் அனைத்திற்கும் பின்னணியில் ஒவ்வொரு காரணம் உண்டு. ஆர்வமின்மை, பதட்டம் மற்று ம் புரிந்துகொள்ளாமல் படித்தல் போன்ற கார ணங்கள் அவ ற்றுள் சில. எனவே இவற்றை அறிந்து நாம் சரி செ ய்தால், நமது நினைவு திறன் குறைபாட்டு பிர ச்சினையைத் தீர்க் கலாம்.
நமது மூளையில் ஏகப்பட்ட செய்திகள் உட்புகுவதால், எதை நினைவில் வைக்க வேண்டும் மற்றும் எதை அழித்துவிட வேண்டும் என்ற வரையறையை நாம் உருவாக்க வேண்டும்.
மூளையின் திறனை அறிதல்
மனித மூளையில் இன்னும் கண்ட றியப்படாத ஏராளமான எண்ணிக் கையில் சிக்கலான அமைப்புகள் உள்ளன. மனித மூளையானது அள வற்ற விஷயங்களை நினைவில் வைக்கும் திறன் கொண்டது. வேற் றுமொழி பெயர்கள், வருடங்கள், எண்கள் மற்றும் கவிதைகள் உள் ளிட்ட பலவித அம்சங்களை நினைவில் வைத்து, தேவைப் படும்போது உடனடி யாக வெளிக்கொணரும் ஆற்றல் உடை யது. பல அசாதாரண நினைவாற்றல் உள்ள நபர்களின் செய ல்பாடுகளைப் பார்த்து நீங்கள் வியந்திருப்பீர்கள். எனவே, உங்களின் நினைவுத் திறனை மேம்படுத்தினால் நீங்களும் பலரை வியக்க வைக் கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக