செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஆண்குறியில் ஏற்படும் 25 வகை நோய்கள்!


ஆண்குறியில் ஏற்படும் 25வகையான நோய்கள்!-அதிர்ச்சித் தகவல்
ஆண்குறியில் ஏற்படும் 25 வகையான
நோய்கள்! – அதிர்ச்சித் தகவல் 

ஆண்குறி நோய்கள் வரக்காரணம்.
1.வாத -பித்த -சிலேத்தும  தொந்ததினாலும்,
2.பெண்களுடன் மிதமிஞ்சி உடலுறவாலும்,
3.வேசிகளுடன் இன்பம் அனுபவிப்பதாலும்,
4.சல்லாப லீலைகள் செய்வதாலும்,
5.பெரும்பாடு நோய் கொண்ட பெண்களுடன் சேருவதாலும்.
6.சிறு நீரை அடக்கி போகம் கொள்வதாலும், ஆண்குறி நோய்கள் ஏற்படுகின்றன.

ஆண்குறி நோய்களின் வகைகள் 25.

1.வாத ஆண்குறி நோய்.
2.பித்த ஆண்குறி நோய்.
3.சிலேற்பன ஆண்குறி நோய்.
4.திரிதோஷ ஆண்குறி நோய்.
5.இரத்த ஆண்குறி நோய்.
6.அரிசிக் கல்  ஆண்குறி நோய்.
7.சிலேற்பன இரத்த ஆண்குறி நோய்.
8.சலரோக  ஆண்குறி நோய்.
9.பித்த இரத்த ஆண்குறி நோய்
10.மேக ஆண்குறி நோய்
11.எரிவு ஆண்குறி நோய்
12.பிடக ஆண்குறி நோய்
13.தாமரை காய் ஆண்குறி நோய்
14.விரலான்குறி ஆண்குறி நோய்
15.அழிவு ஆண்குறி நோய்
16.கலான் குறி நோய்
17.பிளவை ஆண்குறி நோய்
18.தோல் தடை ஆண்குறி நோய்
19.முள்ளிலான் ஆண்குறி நோய்
20.தம்பன ஆண்குறி நோய்
21.எரியவு ஆண்குறி நோய்
22.சுர ஆண்குறி நோய்
23.சதை வளர்த்தி ஆண்குறி நோய்
24.நரம்பு வித்திர ஆண்குறி நோய்
25.தோட பேத ஆண்குறி நோய்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மூலநோய், யார் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்பு இருக்கு!



மூலநோய் காரணம்
கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிகளவில்
மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூலபாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது.
எப்பொழுதும் உட்கார்ந்த நிலை யிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்,
உடல் பருமனானவர்களுக்கு வரலாம்,
உஷ்ணமான உணவுகள், அசைவ உணவுவகைகள், அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்.
கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள்.
நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள் ளாதவர்கள்,
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச் சிக்கல் ஏற்படும்
.
மலச்சிக்கலால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும்.
மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச் சிக்கல்தான்.
உடல்உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவு கள், சிக்கன் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற் பட்டு விடும்.
நீங்கள் மூல நோயின் அறிகு றிகளை உணர்ந்தால் உடனே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள்.
தேநீர் மற்றும் காப்பி அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். வெளியே கடைகளில் சூடான மற்றும் குளிர் பானங்கள் குடிப்பதை தவிருங்கள்.
உங்கள்உணவில் புளிப்பு சுவைபொருட்களை (புளி, எலுமிச்சை, ஊறுகாய், தக்காளி, தயிர், மோர், ஆரஞ்சு, எலுமிச்சை, வினிகர் முதலியன) பயன்படுத்த வேண்டாம்.
அசைவ உணவு (முட்டை கூட) முழுமையாக சாப்பிட கூடாது.
எந்த வடிவத்திலும் மிளகாய் சாப்பிடகூடாது (சிவப்பு, பச்சை, மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய்) மற்றும் காரமான உணவு.
வறுத்த மற்றும் எண்ணெய் உணவு சாப்பிடகூடாது. வேக வைத்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
குடிப்பழக்கம் தவிர்ப்பது மிகவும் நல்லது.
புகையிலை, சுருட்டு, போதை பாக்குகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது
கடினமான உடற்பயிற்சிகள் செய்ய கூடாது (அதாவது பளு தூக்கு தல் போன்றவை ), ஆனால் ஒரு முழுமையான படுக்கை ஓய்வு தேவை இல்லை.
நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கார் ஓட்டுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும்.
இரவுநேர வேலைசெய்வ தையும் அதிக நேரம் இரவில் விழிதிருப்பதையும் தவிர்க்க வேண்டும்
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருக்க கூடாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடமாவது எழுந்து நடை பயிற்சி செய்ய வேண் டும்.
மூல நோய் வராமல் தடுக்க‍ என்னென்ன‌ பயன்படுத்த வே ண்டும் (கண்டிப்பாக)
தினமும் 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் முள்ளங்கி சாறு 50 மில்லி முதல் 100 மில்லி வரை 3 முறை குடிக்க வேண்டும்.
முள்ளங்கி மற்றும் கேரட் கட்டா யமாகசாப்பிடுங்கள். உணவிலோ அல்லது பச்சையாகவோ. உணவு க்கஞ்சி மற்றும் சீரக தண்ணீரை தினமும் இரண்டு வேளை அருந் துங்கள். நார்சத்து நிறைந்த பழ மற்றும் உணவு வகை களை அதிகம் சாப்பிடுங்கள் (பப்பாளி,தர்பூசணி, மாதுளை மற்றும் கொய்யா).

செவ்வாய், 9 டிசம்பர், 2014

குளிர் காலத்தில் கொஞ்சும் அழகு!


ஆங்காங்கே வெண்மை நிறத் திட்டுகளுடன் வறண்டு போகிற சருமம்…பொடுகும் பிசுபிசுப்புமாக பிரச்னைதருகிற கூந்தல்…சொரசொர கைகள்… தடித்தும் வெடித்தும் போகிற பாதங்கள்…இன்னும் இப்படி பனிக்காலத்தில் படையெடுக்கும் அழகுப் பிரச்னைகள் ஏராளம். வெயிலைப் பழித்த வாய், குளிரின் கொடுமையில் அனலுக்குத் தவிக்கும். ”வெயில் காலத்தைவிட, பனிக்காலத்தில் ஏற்படுகிற அழகுப் பிரச்னைகள் அதிகம். குளிர்காலம் முடிகிறவரை சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே, சருமம் மற்றும் கூந்தல்
அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்” என்கிறார் உஷாஸ் பியூட்டி கிளினிக் உரிமையாளர் உஷா.”வெயில் காலத்தில் உபயோகித்த க்ரீம் மற்றும் லோஷன்களுக்கு தற்காலிகமாக விடை கொடுங்கள். பனிக்காலத்தில் மாயிச்சரைசர் அதிகமுள்ள அழகு சாதனங்களையே உபயோகியுங்கள். தரமான மாயிச்சரைசர் வாங்கிக் கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் முகம் கழுவிய உடனேயும், ஒவ்வொரு முறை ஈரத்தில் கைகளை வைத்த பிறகும் மாயிச்சரைசர் தடவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் ஹேண்ட்பேக்கில் மாயிச்சரைசர் இருக்கட்டும். சருமம் லேசாக ”வறள்”கிற மாதிரி உணர்ந்தாலும் உடனே மாயிச்சரைசர் தடவ மறக்காதீர்கள். சன் ஸ்கிரீன் மட்டும் விதிவிலக்கு. வெயில் காலத்தில் மட்டுமின்றி, பனிக்காலத்திலும் சன் ஸ்கிரீன் அவசியம். குறைந்த அளவு எஸ்.பி.எஃப் உள்ளதும் கோகோ பட்டர், ஷியா பட்டர் அல்லது கற்றாழை கலந்ததும், மாயிச்சரைசர் அடங்கியதுமான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கவும். வருடம் முழுக்க கூந்தலில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும், பனிக்காலத்தில் பலவிதமான பிரச்னைகள் தலைதூக்கும். அடிக்கடி தலைக்குக் குளிப்பது, குளிர் காலத்தில் கூந்தலை மிகவும் வறண்டு போகச் செய்யும். சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகித்து தலைக்கு மிதமாக மசாஜ் செய்து விட்டு, காலையில் எழுந்ததும் மிதமான ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். குளிர் காலம் முடிகிற வரை கூந்தலுக்கு ட்ரையர் உபயோகிப்பது, ஸ்ட்ரெயிட்டனிங் மாதிரியான சிகிச்சைகளை செய்து கொள்வதைத் தவிர்க்கவும். அடிக்கிற குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் தண்ணீரில் குளிப்பது இதமாகத்தான் இருக்கும். ஆனால், வெந்நீரில் குளிப்பது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை அறவே நீக்கி விடும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது. சோப்புக்கு பதில் பாடி வாஷ் அல்லது குளியல் பொடி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும். பனி எட்டிப் பார்க்க ஆரம்பித்ததுமே சிலருக்கு உதடுகள் வெடித்து ரத்தமே கசியும். வைட்டமின் இ உள்ள லிப் பாமை அடிக்கடி உதடுகளில் தடவிக் கொள்வது அவற்றை வறண்டு, வெடிக்காமலிருக்கச் செய்யும். உதடுகளில் தோல் உரியாமலிருக்க, லிப் பஃப் உபயோகிக்கலாம். இதை இரவில் உதடுகளின் மேல் மென்மையாகத் தேய்த்துவிட்டு, காலையில் துடைத்து விடலாம்.பாத வெடிப்பும் இந்த நாட்களில் தவிர்க்க முடியாதது. வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை ஊற வைத்துத் தேய்த்து, துடைத்து விட்டு, தரமான ஃபுட் க்ரீம் அல்லது வாசலைன் தடவிக் கொள்ளவும். அதற்கு மேல் காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு படுத்துவிட்டு, காலையில் கழுவி விட்டால், பாதங்கள் வெடிப்பின்றி மென்மையாக இருக்கும். வீட்டிலேயே செய்ய சில சிகிச்சைகள்… அவகேடோ எனப்படுகிற பட்டர் ஃப்ரூட் பனிக்கால சருமப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். கரும்பச்சை நிறத்தில் மென்மையான பழமாகத் தேர்ந்தெடுத்து, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பாகத்தை சுரண்டி எடுக்கவும். அத்துடன், சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து மசித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிடவும். சரும வறட்சியைப் போக்கி, சருமத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளையும் அளிக்கக் கூடியது இந்த பேக். ஐந்து பாதாம் பருப்புகளை எடுத்து, பாலில் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அத்துடன் சிறிது தேன், சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கைகளில் வட்டமாகத் தேய்த்து ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் சோப் உபயோகிக்காமல் கழுவவும். இது சருமம் சுருக்கங்கள் இன்றியும் வறண்டு போகாமலும் இருக்கஉதவும். 1டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர், கால் டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம், அரை டீஸ்பூன் ஓட்ஸ் பொடி எல்லாவற்றையும் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து, கால் மணி நேரம் ஊற வைத்த பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதுவும் சருமத்தை இளமையுடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும்.