ஞாயிறு, 31 மே, 2015

இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . .



இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . .பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பல இயற்கை பொருட்களில் அரிய மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் ஏனோ
அவற்றை புறந்தள்ளுகிறோம். இந்நிலை மாற வேண்டும்.

சிலருக்கு தண்ணீரில் அதிகநேரம் இருந்தால், அவர்களுக்கு சேற்றுப்புண் வந்துவிடும். பின்மாதக் கணக்கில் அது ஆறாமல் தீராத தொல்லைக் கொடுத்து, அவர்களது நிம்ம‍தி கெடுத்து, ஆரோக் கியத்தையும் பாதிக்கும்.
ஆனால் சாதாரணமாக கிடைக்க‍க்கூடியதும், பெண்கள் தங்கள் கை கால் களில் அழகுக்காக வைத்துக்கொள்ளும் மருதாணி இலை யை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து இரவில் படுக்கும்போது . அந்த சேற்றுப்புண்ணில்  பற்று போடவும். அடுத்த‍ நாள் காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் உங்களை காலை நன்றாக கழுவ வேண்டும். இரவில் இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால், சேற்றுப்புண் உங்களிடம் தோற்று ஓடும் என்ன‍ புரியலையா சேற்றுப்புண் விரைவில் குணமாகும்.

ஞாயிறு, 24 மே, 2015

உடல்சூடு தணிக்கும் கல்யாண முருங்கை!



தோட்டங்களில் வேலி மரங்களாக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரத்தின் இலைகள், அதிக மருத்துவக் குணங்கள் கொண்டது. அகன்றும் பெரிதுமாக இருக்கும் இதன் இலைகள், துவர்ப்புச் சுவை கொண்டவை.

கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சீரான இடைவேளைகளில் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுவலி, வாந்தி, பித்த சுரம், வாய்ப்புண், உடல் சூடு ஆகியவை நீங்கி, உடல் வலுப்பெறும். இந்தக் கீரையை நன்றாக அரைத்து, கீரை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்.
ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்து, காலை மாலை இரு வேளையும், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
இரண்டு அவுன்ஸ் கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும். இது வயிற்றுப்போக்கைக் குணப்படுதச் சிறந்த மருந்து.
பெண்கள், கல்யாண முருங்கை இலை ரசத்தைத் தொடர்ச்சியாகக் காலை மற்றும் மாலை வேளைகளில், தலா இரண்டு அவுன்ஸ், இரண்டு அல்லது மூன்று  மாதங்கள் தொடர்ந்து உண்டுவர, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். உடல் பருமன் குறையும், மலட்டுத்தன்மை நீங்கும்.
பாலூட்டும் தாய்மார்கள், தேங்காய்ப்பாலுடன் கல்யாண முருங்கை இலையைச் சமைத்துச் சாப்பிட்டால், பால் நன்கு சுரக்கும்.
ஒன்றிரண்டு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றை, காலை, மாலை இருவேளையும் உண்டுவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையும் நீங்கும்.
கல்யாண முருங்கை இலையை அம்மியில் நசுக்கி, மேகநோயால் ஏற்படும் அரையாப்புக்கு (நெறி கட்டுதல் முதலான பிரச்னைகள்) வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை இலையை, ஒன்றிரண்டாய் நறுக்கி, வெந்நீர் சேர்த்து, பொறுக்கும் சூட்டில் மூட்டை சுற்றிக் கட்டினால், மூட்டு வாத நோயால் ஏற்படும் வலி நீங்கும்.
கல்யாண முருங்கை இலை சாற்றைக் காதில் விட, காதுவலி நீங்கும். பல் வலி இருக்கும் இடத்தில் இலைச்சாற்றை விட்டால் பல் வலிநீங்கும்.
கல்யாண முருங்கைக் கீரையை வாரத்துக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளி, 8 மே, 2015

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்ட‍தா?

 


சில அற்புதத் தகவல்கள்
30 வயதைத் தொட்டவரா நீங்கள்? உங்களை பற்றிய சில அறிவியல் தகவல்கள்
30 வயது காலக்கட்டம் என்பது மனிதவாழ்வின் சிறந்தகாலமாக கருதப்படுகின்றது. 20களில் அனுபவித்த பொருளாதார பிரச்சனை, 40 மற்றும் 50 களில் அனுபவிக்கப்போகும் பொறுப்புகள் ஆகியவற் றை ஒப்பிடுகையில் 30 களில் வாழ்க்கை நிம்மதியானது என்றுதான் சொல்ல வேன்டும். இதிலும் குறி ப்பாக, 35 வயதே மிக சிற ந்த வயதாகவும், உண்மை யான மகிழ்ச்சி 33 வயதி லிருதான் ஆரம்பிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. 30களில் உள்ளவர்களுக்கான சில அறிவியல் தகவல் களை இங்குப் பார்ப்போம்.
30களில் ஒருமனிதன் தன் மாற்றத்திற்காக முடிவெ டுக்கிறான்
வேலைமாற்றம், இடமாற் றம், வாழ்க்கை துணை யை தேர்ந்தெடுத்தல் போ ன்ற பல முக்கிய முடிவுக ளை ஒரு மனிதன் தன் 30களில் தான் எடுக்கிறான் என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம், 20 களின் தன் வாழ்க்கை பாதையை சரி வர படித்து விட்ட இவர்கள், தங்களின் மாற்றத்திற்காகவும் மன திருப்திக்கா கவும் பல முடிவுகளை அப்பொழுது தான் எடுக்க ஆரம்பிக்கின்றனர் என லாம். அதுமட்டுமின்றி, தங்கள் வாழ் க்கையில் மாற்றங்கள் ஏற்பட வேண் டும் எனும் துடிப்பு 30 வயது தொடக்க த்தில் மிகுதியாக காணப்படும் எனக் கூறப்படுகிறது.
30களில் காம உணர்வு மிகுதியாக இருக்கின்றது
30களில் ஒரு மனிதனின், குறிப்பாகப் பெண்களின் காம உணர்ச்சி மிகுதியாக க்காணப்படும் என ஆய்வுக ள் கூறுகின்றன. முக்கிய மாக 31 வது வயதில் பெண் கள் உடலுறவில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். இதனால், அவர்கள் உடல் ரீதியாக, 20களைக் காட்டிலும் அதிக கவர்ச்சியுடன் இருப்பதாகவும் உணர்கின்றனர்.
30களில் வேலை மற்றும் பொருளா தார வெற்றியின் உச்சியில் இருப்பீர் கள்
20 வயதில் பெரும்பாலும் படிப்பில் கவனம் செலுத்தவும் மற்றும் முதல் வேலையில் அமரவும் போராட்டம் நடத்தியிருப்பீர்கள். வேலையில் சே ர்ந்தவுடன் உங்கள் உழைப்பை போட்டு, படிப் படியாக முன்னேறி, ஒரு நல்ல பதவியை அடந்திருப்பீர்கள். 30 வயதை தொடு ம்போது, உங்கள் போராட்டங்கள் ஒரு வழியாக ஓய்து, பொருளா தார வளர்ச்சியை அனுபவிக் க ஆரம்பிப்பீர்கள். அதுமட்டு மின்றி, 30களில், 40 மற்றும் 50களைக்காட்டிலும் பொறுப் புகள் குறைவாக இருக்கும். இக்காரணங்களினால் உங்க ள் வாழ்க்கையை மகிழ்ச்சி யாக வாழ்வீர்கள்.
30களில் உங்கள் தனித்தன்மைகளில் அதிக மாற்றங் கள் வருவதில்லை
30 வயதுக்கு பிறகு, ஒரு மனிதனின் பழக்க வழக்கங்க ள் அவனிடம் அட்டை போல் ஒட்டி கொள்ளும் என சொல்லப்படுகிறது. நமது குணங்கள் குழந்தை பருவத் தில் உருவாக ஆரம்பித்து, 20களில் அனுபவம் மூலமா க மாற்றங்கள் அடைந் து, 30 வயது தொடக்கத் தில் முழுமையடைகிற து. இதனால், 30 வயதுக் கு பிறகு, நம் குணங்கள் பக்குவ நிலையை அ டைந்து, மாற்றங்கள் ஏ ற்படும் சாத்தியங்களை க் குறைக்கின்றது. மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது மற் ற காலக்கட்டங்களை காட்டிலும் மிக குறைந்த அள வே நிகழ்கின்றது.
30களில் உங்களுக்கும் மனச் சோர்வு ஏற்படும்
மனிதனின் ஒவ்வொரு காலக் கட்டமும் சோதனைகள் நிறை ந்தது. அதே போல், உங்கள் வேலையோ அல்லது திரும ண வாழ்க்கையோ நீங்கள் விரும்பியதுபோல் அமையாவிடில் அது உங்களை ம னச்சோர்வுக்கு ஆளாக்கி விடும். இருப்பினும், உங்கள் வயதின் பக்குவத்தினால் உங்கள் பிரச்சனைகளில் முடங்கி கிடக்காம ல், அதற்கான தீர்வை சீக்கிரமே அடை ந்து விட்டு, வாழ்க்கையின் முன்னேற் றத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
30களில் உண்மையான மகிழ்ச்சி ஆரம்பமாகிறது
30 வயதின் ஆரம்பங்களில் ஏற்படும் சோதனைகளை தீர்த்தப்பின், வாழ்க்கை இன்பமயமாய் மாறி விடுகிறது. பெரும்பாலும், 33 வயதில் 70 விழுக்காட்டினர்வேலை மற்றும் வாழ்க் கையின் சமநிலையான வாழ்க்கையை வாழ்ந்து, 38 வயதுகளில் மன நிறைவாக வாழ்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்ற ன. அது மட்டுமின்றி, அவர்கள் வாழ்க்கை யை பற்றிய தெளிவான, முன்னோக்கு பார் வையும் கொண்டுள்ளனர் எனக் கூறப்படு கிறது.

ஆண்களே! உங்களை, உங்களின் அழகை, காண்பவர்கள் கண்கொட்டாமல் ரசிக்க‍ சில குறிப்புக்கள்



ஆண்களின்சருமத்துக்கு என அழகுசாதனப் பொருட்கள் கடைகளில் வந்துவிட்டன. ஆண்கள் தங்கள் சருமத்துக்குச் செய்யவேண்டிய

அழகுக் குறிப்புகள் என்ன? அழகு சாதனப் பொருட்க ளை எப்படித் தேர்வு செய்வது?
ஆண்கள் பொதுவாகத்தலையில் எண்ணெய்தேய்ப்ப து கிடையாது. பொடுகு அதிகரிக்க, இதுவும் ஒரு காரணம். சூடான உட லைக்கொண்டவர்கள், தலைக்கு நல் லெண்ணெய், விளக்கெண்ணெய் ப யன்படுத்தலாம். குளிர்ச்சியானஉடல் வாகு கொண்ட வர்கள், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் பயன்படுத்த லாம்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், தலைக்கு எண் ணெய் தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக் கலாம். பொடுகுப் பிரச்னை உள்ளவர்கள், தலையில் எண் ணெய் வைக்கக் கூடாது.
மன அழுத்தம், தலைக்கு எண் ணெய் தேய்க்காதது, சரி விகித உணவு உண்ணாமை, தூக்கமி ன்மை போன்ற காரணங்களால், இளம் வயதிலேயே முடிகொட்ட ஆரம்பிக்கும். வைட்டமின் சி அதிகம்உள்ள  பழங்கள் மற்றும் பாதாம் பருப் பு ஆகியவற்றைச்சாப்பிட்டுவந்தால், நன்றாக முடி வளரும்.
ஹேர்ஸ்டரெயிட்டனிங், ஹேர்கலரி ங் போன்றவை செயற்கையான அழகு மட்டுமே. இதனால் பக்க விளை வுகள் ஏற்படலாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட் கொண்டு, முறையாகத் தூங்கி எழுந்தாலே, நன்றாக முடி வளரும்.
ஆண்கள் சந்திக்கும் மிக முக்கிய மான  பிரச்னை, முகப்பருக்கள். பருக்களை உடைப்பது, கிள்ளுவ து, அதன்மீது எண்ணெயைத்தடவு வதுகூடாது. கொழுப்புச் சத்து மிகு ந்த  பொருட்களை உட்கொள்வ தை அறவே தவிர்த்தால் போதும். பருக்கள் சில நாட்களில் மறை ந்து விடும்.
நகங்களை ஒழுங்காக வெட்டாமல் இருப்பதாலும் நகம் கடிப்பதாலும் நகத்தில் சேரும் அழுக்குகள், சாப்பி டும்போது உடலுக்குள் செல்கிறது. சிலருக்கு கியூட்டிகில்ஸ் (Cuticles) எனப்படும் வெள்ளை நிற சிறிய அள விலான சதை நகத்தின் ஓரத்தில் வளரும். இவற்றைக் கண்டிப்பாகக் கடிக்கக் கூடாது. 15 நாட்களுக்கு ஒரு முறை நகங்களைச்சீராக வெட்ட வே ண்டு ம்.
தலையில் எண்ணெய் வைக்காதது, ஒழுங்காகத் தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களால் சிலருக்குக் குதிகால் வெடிப்பு ஏற்படலாம். என வே நன்றாகத் தண்ணீர் குடிக்க வே ண்டும். வாரம் ஒருமுறை வாளியில் சுடு தண்ணீர் நிர ப்பி, அதில் எலுமிச்சைச்சாறு மற்றும் கல்உப்பு சேர்த்து , பாதங்களை 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்தால், வெடிப்பு குறை யும்.  அலுவலகம் செல்பவர்கள் தர மான ஷூ பயன்படுத்த வேண்டும். அடிக்கடி ஷூ மாற்றக்கூடாது. இறு க்கமான ஷூ அணியக் கூடாது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடுமை யான வெயில் இருக்கும். அந்த நேரத்தில் பைக் ஓட்டுபவர்கள் முகத்துக்கும் கைகளுக்கும் சன்ஸ்க்ரீன் லோஷன் தடவிக்கொள்ளவேண்டும். எண்ணெய் சரும ம் கொண்டவர்கள் சன்ஸ்க்ரீன் பய ன்படுத்தக் கூடாது. ஸ்லிப்பர் போடு பவர்கள், பாதங்களிலும் சன் ஸ்கிரீ ன் பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தினால் , சருமத்தின் கடினத்தன்மை மறை ந்து, மென்மையாக மாறும். எண்ணெய் சருமம் உள்ள வர்கள் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டாம்.

பேஷியல் செய்வதால், முகத்தில் உள்ள அழுக்குகள் படிப்படியாக நீக்கப்பட்டு, கரும்புள்ளிகள் நீக்கப்படும். நீராவி பிடிப் பதால் முகம் புத் துணர்ச்சி அடைவதோடு பிரகாசமா கவும் இருக்கும். முகத்தைச் சுத்த ப்படுத்த வே ஃபேஷியல்.
அதிகளவு தண்ணீர் குடிப்பது உதடு வற ண்டுபோகாமல் பாதுகாக்கும். பொதுவாகவே, தண்ணீ ர்  அதிகம் எடுத்துக் கொள்வது சருமத்தைப்பொலிவா க்கும். பழங்கள் அதிகம் சாப்பி டுவது, உதட்டை அழகாக்கும். இரவு நேரத்தில் உதட்டில் வெண்ணை தடவிவிட்டுப் படு க்கலாம். பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற் றை உதட்டுக்குத்தடவுதவன் மூலம், உதடு கருமையாகாமல் தடுக்க முடியும்.

குறட்டை விடாமல் அமைதியாக தூங்குவது எப்ப‍டி?



நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவ காசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டை யானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டை வழியாக செல்லும் காற்றுக்கு இப்போது
உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.
ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக் குட்படுகிறது. அழுத் தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.
இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் Dr. ரவிராமலிங்கம் கூறியதாவது:-
காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணை யை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை கார ணமாக சுவாசக் குழாயில் ஏற்படு ம் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை  ஏற்படுகிறது.
முழு தூக்கம் இருக்காது:
யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறை வாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க் கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.
சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத் தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3 வகை நோயாளிகள்:
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.
1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறை யில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்ப தில் சிரமம் இல்லை.
2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தா லும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.
3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.
மாரடைப்பு அபாயம்:
7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல்  ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்து க்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.
ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவு டைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.
கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.
ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற் படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.
கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.
ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ர க்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத் திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.
குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.
இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறிவிட்டதால், இந்நிலை ஏற்பட்டுள்ளது.
குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.
உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப் படுத்திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள லாம்.
குறட்டையை குறைக்க:
ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல் லும் வகை யில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப் படுத்தப்ப டுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகை கள் உள்ளன. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலி ருந்து இன்னொரு பக்கத்திற்கு திருப்பி படுக்க வைத்தாலே குறட்டை ஒலி குறையும்.
ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல், ஆகியவற்றி ல் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை.
யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்க ளை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இள வயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

சிகிச்சை முறை:
குறட்டை பிரச்சினையை அறுவை சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். எல்.ஏ.யு.பி. என்னும் லேசர் சிகிச்சை மூலம் குறட்டையைக் குறைக்க முடியும். குறட்டைக்கு முதல் சிகிச்சை உடல் எடையை குறைப்பதுதான்.
அடுத்து காற்றுச் செல்லும் பாதையிலுள்ள அடைப்பு அதிகமாக இருந்தா ல் மூக்கு, உள்நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளை பரிசோதித்து அடைப்புள்ள இடத்தைக் கண்டறிந்து லேசர் கிச்சையின் மூலம் அடைப் பை சரி செய்யலாம்.
முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிக்கு ஆபரேஷன் செய்தாலும் சரியா ன தீர்வளிக்காது என்பதால் சிறிகிறி என்கிற மாஸ்க்கை ஒவ்வொரு நாளும் தூக்கத்தின் போதும் அணிந்துகொள்ளத் தருகிறோம். அதை அவர்க ள் அணிவதால், அந்த மாஸ்க்கிலுள்ள ஆக்சிஜன் அடை ப்புள்ள இடத்தில் வேகமாக அழுத்தம் கொடுத்து அடைப்பை விலக்கி, காற்று நன்கு செல்ல உதவுகிறது.
இதனால் அவர்கள் குறட்டை பிரச்சினையில்லாமல் ஆழமான தூக்கத் தை அனுபவிக்க முடிகிறது. காற்றடைப்பை கண்டறிய மருத்துவ மனை யில் நவீனமான சிலிப்லேப் என்கிற முழுதும் கம்ப்ïட்டர் மயமாக்கப்பட்ட தூங்கும் அறையுள்ளது. நோயாளியை அந்த அறைக்குள்ளே ஒரு இரவு முழுவதும் தூங்க விடவேண்டும்.
அவரது உடலில் ஒன்பது இடங்களில் கம்ப்யூட்ட ரோடு இணைக்கப்பட்ட கேபிள்கள் பொருத்தப்படு ம். அது அன்று இரவு முழுவதும் அவர் தூங்குவது, குறட்டை விடுவது எத்தனை முறை விழிப்பு வந்து புரண்டு படுத்தார், எந்தப் பக்கமாக படுக்கும்போது குறட்டைகளின் தன்மை எப்படியிருந்தது.
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூளைக்கும், மார்புக்கும் காற்று சென்று வந்த நிலை, அடைப்பு எங்கேயிருக்கிறது என்பதை துல்லியமாகக் கண்டறிந்து விடலாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.