ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

புற்றுநோயை தடுக்கும் பூண்டு

Posted By Muthukumar,On Feb 22,2015

தினமும் பூண்டு சாப்பிட்டுவந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காது’ என்பது ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் அமிர்த வாக்கு.
தினமும் இரண்டு பூண்டுப் பல் சாப்பிட்டுவந்தால், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கும்.  உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.  இதனால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
புற்றுநோய்க்கான அபாயம் குறைவதுடன், புற்றுநோய்க் கட்டிகளை வளரவிடாமல் தடுக்கும்.
உடலில் தேவையற்ற வேதிப்பொருட்களான பாதரசம் மற்றும் காரீயம் போன்றவற்றை உடலைவிட்டு அகற்ற, பூண்டு உதவுகிறது.
புண்கள், காயங்கள் விரைவில் ஆறுவதற்கும், வாயுப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் இது மருந்து.
தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, அரை டம்ளர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதில் இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பல் சேர்த்து, நன்றாகக் காய்ச்சவும். அரை டம்ளராகச் சுண்டியதும், வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
இரண்டுப் பூண்டுப் பல்லை சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து, தோலில் ஏற்படும் எரிச்சல், சிறிய காயங்கள் மீது தடவிவர பலன் கிடைக்கும்.
பூண்டு நல்ல ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும் தன்மைகொண்டது. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டுவந்தால், கெட்டக் கொழுப்பு கரைந்து, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும்.
வயிற்றுவலி மற்றும் குடல் பகுதியில் பிரச்னை உள்ளவர்கள், பூண்டுக் கஷாயம் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
இரண்டு முதல் நான்கு பூண்டுப் பல்லைச் சுட்டு, தேனில் கலந்து சாப்பிட, காய்ச்சல், சளி, இருமல் குணமாகும்.
நெஞ்சு எரிச்சல், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பித்தம் உள்ளவர்கள், ஏதேனும் அறுவைசிகிச்சை செய்தவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் மருத்துவர் பரிந்துரையின்றிப் பூண்டினைப் பயன்படுத்த வேண்டாம்.
பூண்டுப் பல்லை வேகவைக்காமல் சாப்பிடுவது, நல்ல பலனைத் தரும். வாதம், கபம் உள்ளவர்களுக்குப் பூண்டு ஏற்றது.
ஒரு நாளைக்கு நான்கு பூண்டுப் பற்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.

திங்கள், 16 பிப்ரவரி, 2015

பொன்னாங்கண்ணி கீரை


bonnanganni keeraiyin bonnana aarokkiya nanmaikal!
பொதுவாகவே கீரைகளில் பல ஆரோக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதனால் தான் நமது மூதாதையர்கள் அவர்களது அன்றாட உணவுப் பழக்கத்தில் தினசரி கீரைகளை சேர்த்து வந்தனர். கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் பொன்னாங்கண்ணியை கீரைகளின் அரசன் என்றே அழைக்கலாம். ஏனெனில், இதில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடல் சார்ந்த பல குறைப்பாடுகளுக்கு நல்ல பயன் தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து,
கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. இ‌ந்த‌க் கீரையை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால், பகலிலும் நிலவைப் பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு பொன்னாங்கண்ணியில் கண்பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணியின் ஆரோக்கிய நலன்களைப் பற்றி மேலும் நிறைய அறிந்து கொள்ள வேண்டுமா தொடர்ந்து படியுங்கள்… பொ‌ன்னா‌ங்க‌ணபணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். பொன்னாங்கண்ணியில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல்நலம் வலுவடையவும், சருமம் பொலிவடையவும் பெருமளவில் பயனளிக்கிறது. மூல நோய், மண்ணீரல் போன்ற நோய்களால் அவதிப் படுபவர்கள் பொன்னாங்கண்ணியை தினசரி உட்கொண்டு வந்தால் விரைவில் நோய் குணமாகும். இன்று நாம் உண்ணும் உணவில் இருந்து சுவாசிக்கும் காற்று வரை அனைத்திலும் இரசாயனம் கலந்திருப்பதால். அவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது. பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனைக்கு நல்ல பலனளிக்கும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் காலை வேளையில் பொன்னாங்கண்ணியை சாப்பிட்டு வந்தால் விரைவில் வாய் துர்நாற்றப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பொன்னாங்கண்ணியில், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு கொடு‌க்கு‌ம் ஆரோக்கிய பயன்கள் உண்டு. அதனால் முடிந்த வரை வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது உங்களது உணவுப் பழக்கத்தில் பொன்னாங்கண்ணியை சேர்த்துக் கொள்வது நல்ல ஆரோக்கியம் தரும்.

புதன், 11 பிப்ரவரி, 2015

உப்பைக் குறைத்தால் மாரடைப்பு வரும்

Posted By MUthukumar,On Feb 11,2015
SALT
உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்றுதான் , இதுவரை டாக்டர்கள் கூறி வந்தனர். இப்போதோ, உப்பைக் குறைத்துக்கொண்டால், மாரடைப்பு ஏறப்டும் என்று ஆய்வாளர்கள் கூறி அலற வைக்கின்றனர்.
உப்பின் சுவை இல்லாமல் எந்த உணவும் சுவைக்காது. உப்பின் அளவு அதிகரித்தால், எந்த உணவையும் சாப்பிட முடியாது. உணவில் உப்பின் அளவு அதிகரிப்பது உயிருக்கு ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்பது மருத்துவர்கள் கருத்தாகும்.
உப்பைக் குறைத்தாலும் இதய நோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர் ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும்தான் காரணம் என்கின்றனர், ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க , மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்ற்னர். இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன் ஹேகன் பல்கலைக் கழக மருத்துவமனையில் 40,000 பெரிடம் ஆய்வு மேற்கொள்ளப்படட்து. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக்கொள்வோரின் உடலில் 2.5 சதவிகிதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது
இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தவர்களின் சிறுநீரகத்தில், ரெனின் என்ற புரதமும் , அல்டோஸ்டின் என்ற ஹர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உப்பைக் குறைத்தால், இதய நோயை ஏற்படுத்தும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். .