செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஆண்குறியில் ஏற்படும் 25 வகை நோய்கள்!


ஆண்குறியில் ஏற்படும் 25வகையான நோய்கள்!-அதிர்ச்சித் தகவல்
ஆண்குறியில் ஏற்படும் 25 வகையான
நோய்கள்! – அதிர்ச்சித் தகவல் 

ஆண்குறி நோய்கள் வரக்காரணம்.
1.வாத -பித்த -சிலேத்தும  தொந்ததினாலும்,
2.பெண்களுடன் மிதமிஞ்சி உடலுறவாலும்,
3.வேசிகளுடன் இன்பம் அனுபவிப்பதாலும்,
4.சல்லாப லீலைகள் செய்வதாலும்,
5.பெரும்பாடு நோய் கொண்ட பெண்களுடன் சேருவதாலும்.
6.சிறு நீரை அடக்கி போகம் கொள்வதாலும், ஆண்குறி நோய்கள் ஏற்படுகின்றன.

ஆண்குறி நோய்களின் வகைகள் 25.

1.வாத ஆண்குறி நோய்.
2.பித்த ஆண்குறி நோய்.
3.சிலேற்பன ஆண்குறி நோய்.
4.திரிதோஷ ஆண்குறி நோய்.
5.இரத்த ஆண்குறி நோய்.
6.அரிசிக் கல்  ஆண்குறி நோய்.
7.சிலேற்பன இரத்த ஆண்குறி நோய்.
8.சலரோக  ஆண்குறி நோய்.
9.பித்த இரத்த ஆண்குறி நோய்
10.மேக ஆண்குறி நோய்
11.எரிவு ஆண்குறி நோய்
12.பிடக ஆண்குறி நோய்
13.தாமரை காய் ஆண்குறி நோய்
14.விரலான்குறி ஆண்குறி நோய்
15.அழிவு ஆண்குறி நோய்
16.கலான் குறி நோய்
17.பிளவை ஆண்குறி நோய்
18.தோல் தடை ஆண்குறி நோய்
19.முள்ளிலான் ஆண்குறி நோய்
20.தம்பன ஆண்குறி நோய்
21.எரியவு ஆண்குறி நோய்
22.சுர ஆண்குறி நோய்
23.சதை வளர்த்தி ஆண்குறி நோய்
24.நரம்பு வித்திர ஆண்குறி நோய்
25.தோட பேத ஆண்குறி நோய்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

மூலநோய், யார் யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்பு இருக்கு!



மூலநோய் காரணம்
கார உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள். குறிப்பாக உணவில் அதிகளவில்
மிளகு, மிளகாய், இஞ்சி போன்ற மசாலா வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு எல்லாம் மூலபாதிப்பானது வருவதற்கு வாய்ப்புள்ளது.
எப்பொழுதும் உட்கார்ந்த நிலை யிலேயே பணிபுரிபவர்களுக்கு வரலாம்,
உடல் பருமனானவர்களுக்கு வரலாம்,
உஷ்ணமான உணவுகள், அசைவ உணவுவகைகள், அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
மது அதிகம் அருந்துதல், புகைபழக்கம், நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூல நோய் வரலாம்.
உடம்பிற்கு போதுமான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கமற்றவர்கள்.
கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவினை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள்.
நார்சத்து உள்ள காய்கள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள் ளாதவர்கள்,
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் அற்றவர்களுக்கு மலச் சிக்கல் ஏற்படும்
.
மலச்சிக்கலால் மலக்குடல் சுருங்கி அதில் வீக்கம் ஏற்பட்டு மலம் இறுகி அதனால் புண், அரிப்பு ஏற்படும்.
மூல நோய்க்கு முதல் காரணமே மலச்சிக்கல்தான். உடம்பின் பல சிக்கலுக்கு காரணமே இந்த மலச் சிக்கல்தான்.
உடல்உஷ்ணத்தை மேலும் அதிகபடுத்தும் கார உணவு கள், சிக்கன் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை உண்பதால் மலம் இறுகி மூலநோய் ஏற் பட்டு விடும்.
நீங்கள் மூல நோயின் அறிகு றிகளை உணர்ந்தால் உடனே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள்.
தேநீர் மற்றும் காப்பி அருந்துவதை முற்றிலும் தவிருங்கள். வெளியே கடைகளில் சூடான மற்றும் குளிர் பானங்கள் குடிப்பதை தவிருங்கள்.
உங்கள்உணவில் புளிப்பு சுவைபொருட்களை (புளி, எலுமிச்சை, ஊறுகாய், தக்காளி, தயிர், மோர், ஆரஞ்சு, எலுமிச்சை, வினிகர் முதலியன) பயன்படுத்த வேண்டாம்.
அசைவ உணவு (முட்டை கூட) முழுமையாக சாப்பிட கூடாது.
எந்த வடிவத்திலும் மிளகாய் சாப்பிடகூடாது (சிவப்பு, பச்சை, மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய்) மற்றும் காரமான உணவு.
வறுத்த மற்றும் எண்ணெய் உணவு சாப்பிடகூடாது. வேக வைத்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.
குடிப்பழக்கம் தவிர்ப்பது மிகவும் நல்லது.
புகையிலை, சுருட்டு, போதை பாக்குகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது
கடினமான உடற்பயிற்சிகள் செய்ய கூடாது (அதாவது பளு தூக்கு தல் போன்றவை ), ஆனால் ஒரு முழுமையான படுக்கை ஓய்வு தேவை இல்லை.
நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து கார் ஓட்டுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும்.
இரவுநேர வேலைசெய்வ தையும் அதிக நேரம் இரவில் விழிதிருப்பதையும் தவிர்க்க வேண்டும்
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருக்க கூடாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 நிமிடமாவது எழுந்து நடை பயிற்சி செய்ய வேண் டும்.
மூல நோய் வராமல் தடுக்க‍ என்னென்ன‌ பயன்படுத்த வே ண்டும் (கண்டிப்பாக)
தினமும் 5 முதல் 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் முள்ளங்கி சாறு 50 மில்லி முதல் 100 மில்லி வரை 3 முறை குடிக்க வேண்டும்.
முள்ளங்கி மற்றும் கேரட் கட்டா யமாகசாப்பிடுங்கள். உணவிலோ அல்லது பச்சையாகவோ. உணவு க்கஞ்சி மற்றும் சீரக தண்ணீரை தினமும் இரண்டு வேளை அருந் துங்கள். நார்சத்து நிறைந்த பழ மற்றும் உணவு வகை களை அதிகம் சாப்பிடுங்கள் (பப்பாளி,தர்பூசணி, மாதுளை மற்றும் கொய்யா).

செவ்வாய், 9 டிசம்பர், 2014

குளிர் காலத்தில் கொஞ்சும் அழகு!


ஆங்காங்கே வெண்மை நிறத் திட்டுகளுடன் வறண்டு போகிற சருமம்…பொடுகும் பிசுபிசுப்புமாக பிரச்னைதருகிற கூந்தல்…சொரசொர கைகள்… தடித்தும் வெடித்தும் போகிற பாதங்கள்…இன்னும் இப்படி பனிக்காலத்தில் படையெடுக்கும் அழகுப் பிரச்னைகள் ஏராளம். வெயிலைப் பழித்த வாய், குளிரின் கொடுமையில் அனலுக்குத் தவிக்கும். ”வெயில் காலத்தைவிட, பனிக்காலத்தில் ஏற்படுகிற அழகுப் பிரச்னைகள் அதிகம். குளிர்காலம் முடிகிறவரை சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றினாலே, சருமம் மற்றும் கூந்தல்
அழகைத் தக்க வைத்துக் கொள்ளலாம்” என்கிறார் உஷாஸ் பியூட்டி கிளினிக் உரிமையாளர் உஷா.”வெயில் காலத்தில் உபயோகித்த க்ரீம் மற்றும் லோஷன்களுக்கு தற்காலிகமாக விடை கொடுங்கள். பனிக்காலத்தில் மாயிச்சரைசர் அதிகமுள்ள அழகு சாதனங்களையே உபயோகியுங்கள். தரமான மாயிச்சரைசர் வாங்கிக் கொள்ளுங்கள். குளித்து முடித்ததும் முகம் கழுவிய உடனேயும், ஒவ்வொரு முறை ஈரத்தில் கைகளை வைத்த பிறகும் மாயிச்சரைசர் தடவுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் ஹேண்ட்பேக்கில் மாயிச்சரைசர் இருக்கட்டும். சருமம் லேசாக ”வறள்”கிற மாதிரி உணர்ந்தாலும் உடனே மாயிச்சரைசர் தடவ மறக்காதீர்கள். சன் ஸ்கிரீன் மட்டும் விதிவிலக்கு. வெயில் காலத்தில் மட்டுமின்றி, பனிக்காலத்திலும் சன் ஸ்கிரீன் அவசியம். குறைந்த அளவு எஸ்.பி.எஃப் உள்ளதும் கோகோ பட்டர், ஷியா பட்டர் அல்லது கற்றாழை கலந்ததும், மாயிச்சரைசர் அடங்கியதுமான சன் ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கவும். வருடம் முழுக்க கூந்தலில் எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கும், பனிக்காலத்தில் பலவிதமான பிரச்னைகள் தலைதூக்கும். அடிக்கடி தலைக்குக் குளிப்பது, குளிர் காலத்தில் கூந்தலை மிகவும் வறண்டு போகச் செய்யும். சுத்தமான தேங்காய் எண்ணெய் உபயோகித்து தலைக்கு மிதமாக மசாஜ் செய்து விட்டு, காலையில் எழுந்ததும் மிதமான ஷாம்பு கொண்டு அலசி விடுங்கள். குளிர் காலம் முடிகிற வரை கூந்தலுக்கு ட்ரையர் உபயோகிப்பது, ஸ்ட்ரெயிட்டனிங் மாதிரியான சிகிச்சைகளை செய்து கொள்வதைத் தவிர்க்கவும். அடிக்கிற குளிருக்கு இதமாக ஆவி பறக்கும் தண்ணீரில் குளிப்பது இதமாகத்தான் இருக்கும். ஆனால், வெந்நீரில் குளிப்பது சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை அறவே நீக்கி விடும். வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதே சிறந்தது. சோப்புக்கு பதில் பாடி வாஷ் அல்லது குளியல் பொடி உபயோகிப்பது சருமத்தைக் காக்கும். பனி எட்டிப் பார்க்க ஆரம்பித்ததுமே சிலருக்கு உதடுகள் வெடித்து ரத்தமே கசியும். வைட்டமின் இ உள்ள லிப் பாமை அடிக்கடி உதடுகளில் தடவிக் கொள்வது அவற்றை வறண்டு, வெடிக்காமலிருக்கச் செய்யும். உதடுகளில் தோல் உரியாமலிருக்க, லிப் பஃப் உபயோகிக்கலாம். இதை இரவில் உதடுகளின் மேல் மென்மையாகத் தேய்த்துவிட்டு, காலையில் துடைத்து விடலாம்.பாத வெடிப்பும் இந்த நாட்களில் தவிர்க்க முடியாதது. வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களை ஊற வைத்துத் தேய்த்து, துடைத்து விட்டு, தரமான ஃபுட் க்ரீம் அல்லது வாசலைன் தடவிக் கொள்ளவும். அதற்கு மேல் காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டு படுத்துவிட்டு, காலையில் கழுவி விட்டால், பாதங்கள் வெடிப்பின்றி மென்மையாக இருக்கும். வீட்டிலேயே செய்ய சில சிகிச்சைகள்… அவகேடோ எனப்படுகிற பட்டர் ஃப்ரூட் பனிக்கால சருமப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். கரும்பச்சை நிறத்தில் மென்மையான பழமாகத் தேர்ந்தெடுத்து, உள்ளே இருக்கும் சதைப்பற்றான பாகத்தை சுரண்டி எடுக்கவும். அத்துடன், சில துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து மசித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிடவும். சரும வறட்சியைப் போக்கி, சருமத்துக்குத் தேவையான ஊட்டச் சத்துகளையும் அளிக்கக் கூடியது இந்த பேக். ஐந்து பாதாம் பருப்புகளை எடுத்து, பாலில் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அத்துடன் சிறிது தேன், சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து முகம் மற்றும் கைகளில் வட்டமாகத் தேய்த்து ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் சோப் உபயோகிக்காமல் கழுவவும். இது சருமம் சுருக்கங்கள் இன்றியும் வறண்டு போகாமலும் இருக்கஉதவும். 1டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர், கால் டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம், அரை டீஸ்பூன் ஓட்ஸ் பொடி எல்லாவற்றையும் கலந்து, முகம், கழுத்து, கைகளில் தேய்த்து, கால் மணி நேரம் ஊற வைத்த பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். இதுவும் சருமத்தை இளமையுடனும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கும்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

முதுகுவலி… முத்தான தீர்வுகள்!


முதுகுவலி… அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். இயல்பான இயக்கத்தையே முடக்கும் அளவுக்கு ஆபத்துள்ள இந்நோயைப் பற்றி, விழிப்பு உணர்வுத் தகவல்களை வழங்குகிறார், எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் சண்முகசுந்தரம்.
”முதுகுவலி என்று சொல்வது, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந்த பிரச்னை! கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும்புகள்… இவற்றை உள்ளடக்கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள நரம்புகள் மூளையிலிருந்து கை – கால்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்த எலும்பு, நரம்பில் ஏற்படும் பிரச்னைகளே ஒருவருக்கு முதுகுவலியை ஏற்படுத்தும்.
காரணங்கள்: அதிக நேரம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது, முறையான பொஸிஷனில் இல்லாமல் கனமான பொருட்களைத் தூக்குவது, பெண்களுக்கு கர்ப்பப்பை, நீர்ப்பை போன்றவற்றில் ஏற்படும் கிருமித்தொற்று, 40 வயதைக் கடந்த பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டால் எலும்புகளில் உண்டாகும் கால்சியம் குறைவு, குடல்நோய் பாதிப்பு, அதிக அயற்சி (ஸ்ட்ரெய்ன்), கிருமிகளின் தாக்குதல் (காய்ச்சல், வைரஸ், பாக்டீரியா தாக்குதல்), எலும்புப் புற்றுநோய்… இவையெல்லாம் முதுகுத் தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், முதுகுவலி வரலாம்.
வயது: எல்.கே.ஜி குழந்தைகள் முதல் கோலூன்றும் வயது வரை யாருக்கும் வரலாம்.
கண்டறிவது எப்படி: சிலருக்கு முதுகுவலியுடன் கூடிய கால்வலி வரக்கூடும். சிலர் இருமும்போது, தும்மும்போதுகூட முதுகுவலியை உணரலாம். சிலருக்கோ குறுகிய தூரம் நடப்பது மட்டுமின்றி, சிறிது நேரம் அமர்வதுகூட இயலாததாக இருக்கும். தண்டுவடத்தில் நாள்பட்ட பாதிப்பு கண்ட சிலருக்கு கூன் விழலாம். திடீரென முதுகுவலி வந்தால், சமீபத்திய ஏதாவதொரு செயலின் விளைவு என்று, தேவையான ஓய்வெடுப்பது போதுமானது. தொடர்ந்து முதுகுவலியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். சாதாரண எக்ஸ்ரேவில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியாது என்பதால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் அவசியம்.
சிகிச்சைகள்: ஆரம்பகட்டம் அல்லது பழக்கவழக்கத்தால் ஏற்பட்ட முதுகுவலி உள்ளவர்களுக்கு ஓய்வு, வலிநிவாரணி, நரம்புக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகள், மருத்துவ ஆலோ சனை சொல்லும் வாழ்க்கை முறை மாற்றம் போதுமானது. இதுவே, அதிகப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு அறுவை சிகிச்சையே நிரந்தர தீர்வைத் தரும்.
இன்றைய காலகட்டத்தில், தண்டுவட பிரச்னைகளுக்கு மைக்ரோ, லேசர் சர்ஜரி என பல சிகிச்சைகள் மூலம் தீர்வு காணப்படுகிறது. அதேநேரத்தில் இத்தகைய சிகிச்சைகள் சரியான உடல்தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுவதால் வேறுவிதமான பிரச்னைகள் எழ வாய்ப்பில்லை.
எவ்வளவு செலவாகும்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்றவற்றுக்கு 3 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆரம்பகட்ட பிரச்னை என்றால் மருந்து, மாத்திரை என சில ஆயிரங்கள் செலவாகும். அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவசமாகவும், குறைந்த செலவுடனும் செய்துகொள்ளமுடியும்.
வராமல் தடுக்க: நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பது, சேரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நேராக நிமிர்ந்து அமர்வது, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது…
இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டுவடத்துக்கு பாதிப்பு ஏதும் நேராமல் காக்கும். மேலும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன்றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக்கொள்வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகுவலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்!”

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

குழந்தைக்கு ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சிப் படிகள்!


தாய்மார்களே! கர்ப்பிணிகளே! கவனிக்க – உங்க குழந்தை, ஒவ் வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சிப் படிகள்! (நிலைகள்) கடக் கும்!

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர் பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட
காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.
இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வய திற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.
அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது(mile stone) தவழப் தொடங்குதல் .
இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறு கிறது.
அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழு தல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR) சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், ) (SOCIAL)
நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை (FINE MOTOR)
பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி (SPEECH AND HEARING )
இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப்படிமுறைகளை பார்ப்போம்.
தலைய நேராக வைத்திருத்தல் (head control ) —– 4 மாதம்
குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) —- 3 – 6 மாதம்
துணையாக நாம் பிடித்துக் கொள்ளும் போது இருத்தல் —–5 மாதம்
எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ——- 6மாதம்
தவழுதல் ——– 8மாதம்
எழுந்து நிற்றல் ——– 9மாதம்
பிடித்துக்கொண்டு நடத்தல் —-10 மாதம்
துணையின்றி நடத்தல் —–12 மாதம்
ஓடுதல் ——– 15மாதம்
ஒரு பந்தை உதைத்தல் ——–24மாதம்
மூன்று சக்கரங்களைக்கொண்ட வண்டியை மிதித்தல் —–36மாதம
மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்
தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
குப்புறப்படுத்திருக்கும்போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
அசையும் பொருள் அல்லது நபர்க ளை தொடர்ச்சியாக பார்த்தல்
உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்ப ந்தமானவை
ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்த ல்
நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்
ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தமானவை
இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட் களை எட்டிப் பிடித்தல்
சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொருகைக்கு மாற்றுதல்
தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்
உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்த மானவை
சாப்படைக் கொடுக்க, போகும் போது வாயைத் திறத்தல்
மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித் தல்
பேச்சு
நெருக்கமானவர்களின் முகங்க ளை அறிந்து கொள்ளுதல்
தொந்ததரவுக்கு உள்ளாகும்போது அழுதல்
கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்
ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தப்பட்டது
சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
சிறிய உணவுத்துண்டுகளை தானாக வே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடு தல்
துணையின்றி சில அடிகள் நடத்தல்
உணர்ச்சி சம்பந்த பட்டவை
மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
இசையை கேட்டு சிறிய உடல் அசைவு களைக் காண்பித்தல்
தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொரு ட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்
பேச்சு
அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்கு தல்
வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்க ளை அறிந்து கொள் ளுதல் மற்றவர்க ளோடு பேச முய ற்சித்தல்
வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைக ளை உணர்ந்து கொள்ளுதல்

பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா?

Posted By Muthukumar ,On September 2014

இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது. பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில்
வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள். காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும். மேலும் உடல் எடையும் குறையும். அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. மேலும் இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. அதுமட்டுமின்றி, அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது. தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும். சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும். செலரியில் கலோரிகள் சுத்தமாக இல்லை. மேலும் இதில் வைட்டமின் கே போதிய அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் இதில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதுவும் அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும். இந்த சூப்பர் உணவுப் பொருளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, கலோரிகள் இல்லாததால் உடல் எடையும் குறையும். குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். பரங்கிக்காயில் நீர்ச்சது அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம். 

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

உடலுறவின் போது ஆண்களின் பங்கு!


பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம்ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலு பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்தி ருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக் கட்டத்தையும், சந்தோஷத்தை யும்கொடுத்து பின்புதானும் உச் சத்தை அடைந்துபின் விந்தை வெளியிட்டுவெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையு ம்செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணை ப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோதே வையில்லை யோ சம்மதித்தால்மட்டுமே போ
துமானது நடந் தேறிவிடும். நடத்தும்கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக் குகளை சொல்லிக் கொ ண்டு காரணங்களை கண் டுபிடித்துக்கொண்டு கால த்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற் கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்க ரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகி ன்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்க ளும் பலர் இன் னும் இள மையுடனும் உற்சாகத் துடன் தங்கள் துணவிய ரின் அன்போடு வாழத் தான் செய்கிறார்கள். இத ற்கு வயது ஒரு பொருட் டேயல்ல. வயதானவர்க ளும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இ தற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலா ம்.
பெரும்பாலான ஆண்கள் பா திக்கப்படுவது விறைப்பின் மையால்தான். இதனைத் தமிழில் நரம்புத்தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பல வாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்ட னர். இதனை சரியான வகையி ல் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு கார ணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு ம ற்றொன்று மனம் ரீதியான கோளா று.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச்செல்லக்கூடிய நுண் ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூ ளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படா து போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டு வடத்தில் ஏற்படும் அடி அல்ல து கீழே விழுந்து காயப்படுவ து போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியா து நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல்போவது அதே ஆண்களால் தனியாக இருக்கு ம் பொழுதும் இரவில் தூங்கு ம் பொழுதும் விறைப்பு அடை ய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ் நிலையால் ஏற்படும் ஆண்மை க்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறை விற்கும் சம்பந்தமுண்டு என்று ம் வயது ஏற ஏற ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உ ள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோ ன்களில் சுரப்பு குறைந்து கொண் டேவரும். அதனால் சில ஆண்க ளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட லாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவு ம் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெ ருக்கம் போன்றவற்றாலு ம் ஆண்மை க்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இர த்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்து கள், மன அழுத்த மருந்து கள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆ ண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடை ய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள் , வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகி யோருக்குபெரிதும் இந்த ஆண்மைக் குறைவு ஏற்படுவதில் லை.
மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் இதற் கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாள டைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சம யம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம்.அதே சமயம் தொடர்ந்து உப யோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்ட றியப்பட்டுள்ளது. எனவே ஆங்கி ல மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.
ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மரு த்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆ ண்மைத் தன்மையை அதிக ரிப்ப தாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலி கைகளை அனுபவ ரீதியாக வும், தேவைக்கேற்பவும் பய ன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவா கவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற் றம் ஏற்படுகின்றது. பெண்களு க்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையு ம் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒருவிதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போ ன்றவை ஏற்படுகின்றன.
எனவே நாற்பது வயதைக் கடந் த இருபாலரும் உற்சாகமளிக்கு ம் ஊக்க மருந்துகளைப் பயன்ப டுத்துவது நன்மையே தரும். இ த்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கே ப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக்கூடிய மூலிகைகள், அமுக்கிரா , பூனைக்காளி, சாலா மி சிறி, முருங் கை வித்து, முருங்கை பிசின், நிலை ப்பனைக் கிழங்கு, குறுந் தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்கும ப்பூ போன்றவை ஆகும். இவ ற்றை தனி மூலிகைகளா கவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவை க்கேற்ப என ஒரிருநாட்கள் மட்டு ம் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியை யும் தேஜனையும் வள ங்கிடும்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பத னிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக் கப்பட்ட தனி மூலிகைப் பொடி யாகக் கிடைக்கின்றது. இது பக்குவ ப்படுத்தப்பட்ட மூலிகைப்பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரி க்கப்படாமல் முறையாக தயாரிக்கப் பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்க ரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடைய வர்கள் தண்ணீரில் கலந்து பருகலா ம்.. ஆண் பெண் இருபாலரும் உப யோகிக்கலாம். பக்க விளைவு இல் லை பாதுகாப்பானது. மூலிகைமட்டு மே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.