ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பனிக்காலத்தில் பட்டுக்குட்டிகளை பத்திரமா பாத்துக்கங்க!

Posted On Dec 03,2012,By Muthukumar
Winters Here Time Now Child Care
மழைக்காலம் முடியும் முன்பே பனிக்காலம் தொடங்கிவிட்டது. அதிகாலையில் மூடுபனி சில்லிடச் செய்வதால் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சளி, மூக்கில் வடிதல், இருமல் போன்றவை அதிகம் தாக்கும். தவிர தொண்டையில் டான்சில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத்திணறல் நோய்கள் இந்த பனிக்காலத்தில்தான் அதிகரிக்கின்றன. அது மட்டுமல்லாது இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா, ஒற்றைத் தலைவலி, மூட்டுவலிகள், நரம்பு நோய்கள், தோல் நோய்கள் ஆகிய பல வியாதிகள் ஒவ்வொன்றாக வரிசை கட்டி நிற்கும்.
சிக்குன்குனியா, ஜப்பான் சுரம், மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தாக்குகின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை இவை தாக்குவதால் அவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இவற்றில் தப்பிக்க வருமுன் காப்பதே நல்லது.
சத்தான உணவு
குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதன் மூலம் எந்தவித நோயும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்காது.
காய்ச்சி ஆறவைத்த தண்ணீரையே குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்கவேண்டும். அதிகம் இருமல் இருந்தால் வெதுவெதுப்பான சுடுநீரை குடிக்க கொடுக்கலாம்.
பனிக்காலத்தில் பெரியவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் உடல் வறட்சி ஏற்படும். எனவே சருமம் வறண்டு போகாமல் இருக்க நிறைய பழங்கள், சத்தான காய்கறிகளை சாப்பிடக் கொடுக்கவேண்டும். இதன் மூலம் உடல் வறட்சி நீங்குவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
காரமான மசால உணவு வேண்டாம்
பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் வயிறு உபாதைகளும் ஏற்படும். எனவே அதிக காரமில்லாத மிதமான உணவுகளையே குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும். அப்பொழுதுதான் உணவு எளிதில் ஜீரணமாகும்.
மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள். பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க்காய்கறிகள் தவிர்த்துவிடுங்கள்.
தலை காது வழியே பனி விரைவில் உடலுக்குள் சென்று உபாதை தரும். எனவே வெளியே பனியில் செல்ல நேர்ந்தால் முக்கியமாய் குழந்தைகளுக்கு காதுகளை மூடும் குரங்குக்குல்லா போட வேண்டும். இதன்மூலம் குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் வருமுன் தடுக்கலாம்.
சளி நீக்கும் கற்பூரத்தைலம்
சளியினால் அதிகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை விட வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கற்பூர எண்ணெயினை பூசி விடலாம். இதன் மூலம் சளித் தொந்தரவு நீங்கும். குழந்தையின் சருமமும் பாதிக்கப்படாது.
ஒரு குழிக்கரண்டி அல்லது கிண்ணத்தில் 15 சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு சூடாக்கவும். தேங்காய் எண்ணெய் நன்கு சூடானதும் அதனை இறக்கிவிட்டு அதில் ஒரு சிறு கட்டி கற்பூரத்தைப் போடவும். உடனடியாக எண்ணெயில் கற்பூரம் கறைந்திருக்கும்.
நமது கைக்கு சூடு பொறுக்கும் அளவிற்கு உள்ள பதத்தில் தொட்டு குழந்தையின் நெஞ்சுப் பகுதி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தேய்த்துவிடவும். அந்த சூட்டில் மார்பில் இருக்கும் சளி கரைந்து மூக்கு வழியாகவோ அல்லது மலம் வழியாகவோ வெளியேறிவிடும். குழந்தைக்கு இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

செயற்கை சர்க்கரையினால் பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம்

சர்க்கரைக்கு பயந்து செயற்கை சர்க்கரையை சாப்பிடுபவர்கள் காசு கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கின்றனர் என்று எச்சரிக்கின்றனர் உணவியல் நிபு ணர்கள். ஏனெனில் செயற்கை சர்க்க ரையில் உள்ள ரசாயனங்களினால் புற் றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயம் என் று அதிர்ச்சியளித்து ள்ளனர்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவு களில் உடலுக்குத் தேவையான சர்க்க ரை கிடைத்துவிடுகிறது. சாதம், கோது மை உணவுகள், உருளைக் கிழங்கு, பால், கா ய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றிலும் சர்க்கரை இருக்கும்போ து, தனியாக சர்க்கரையை சேர்க்க வேண்டியதில்லை என்பது மருத் துவர்களின் அறிவுரை. தனியாக சேர்க்கப்படும் சர்க்கரையில் எந்த வித சத்துக்களும் இல்லை மாறாக கலோரிகள் அதிகரிக்கின்றன என வே ஆரோக்கியமான நபருக்கு ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் தேவையில்லை என்று நிபுண ர்கள் கூறியுள்ளனர். கடின உழைப் பாளிகள், குழந்தைகள் மட்டும் நாளொன்றுக்கு3 முதல்5 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலா மாம்.
சர்க்கரையானது சுக்ரோஸ்( வீட்டில் உபயோகப்படுத்துவது) லாக் டோஸ் ( பாலில் உள்ளது) ப்ரக்டோஸ் ( பழங்களில் உள்ளது) மால் டோஸ் மற்றும் குளுக்கோஸ் என பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் சாப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் சர்க்கரை கரும்புச்சாறில் இருந்து தயாரிக்கப் படுகிறது. பழுப்பு நிற சர்க்கரையை பயன்படுத்துவத னால் உடலுக்கு தீங்கில்லை. அதேசமயம் ரசாயனம் சேர்த்து வெண் மையாக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு தீங்கு தரக்கூடியது. இதனை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் கலோரி கள் அதிகரித்து உடல் பருமன், பற்களில் பாதிப்பு, நீரிழிவு போன் றவை ஏற்படுகி ன்றன.
இதனை தவிர்க்கவும், கலோரிகளை கட்டுப்படுத்தவும் செயற்கை சர்க்கரை அறிமுகம் செய்யப்பட்டது. செயற்கை சர்க்கரையை பொறுத்த வரை, சாதார ண சர்க்கரையில் உள்ள இனிப்பைவிட 200 மடங்கு இனிப்பு அதிகம். அதற்கு இந்த அஸ்பார்டேம் என்ற ரசாயன கலவை தான் காரணம். சாதாரண சர்க்கரையில் ஒரு கிராமில் நான்கு கலோரி உள்ளது. ஆனால், செயற்கை சுவீட்னரில் அந்த அளவுக்கு கலோரியே இல் லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடிப்பேர், செயற்கை இனிப் பூட்டிகள் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மலாஸ்ஸினி பவுண்டேஷன் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமை ப்பு சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற் படுவதற்கு இந்த அஸ்பார்ட்டேம் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. இது எந்த அளவு உண் மை என்பது உறுதி செய்யப்படா விட்டாலும், செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ள து.
ஒரு சிலர் இனிப்புச் சுவைக்கு சர்க்கரைக்கு பதில் செயற்கை சர்க் கரை பயன்படுத்தினால் கலோரி அதிகரிக்காது என்கிறார்கள். சர்க் கரையைத் தவிர்த்து, செயற் கை இனிப்பு சேர்த்தால் எடை கூடாது என்கிற தவறான எண்ணத்தில், பலரும் ஒரு நா ளைக்கு அதைச் சேர்த்து ஏக ப்பட்ட காபி, டீ, குளிர்பானங் களை அருந்துகிறார்கள் இது தவறான செயல். ஏனெனில் செயற்கை சர்க்கரை என்பது நீரிழிவுக் காரர்களுக்கானது. மற்றவர்களுக்கு அது தேவையே இல்லை.
இயற்கை சர்க்கரை வகையைச் சார்ந்த சுக்ரலோஸை கர்ப்பிணி கள், குழந்தைகள் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் சாக்ரின், ஆஸ்பர்டேம் என செயற்கை சர் க்கரை வகையறாக்கள் எல்லா மே ரசாயனக்கலப்புள்ளது. நீரி ழிவு உள்ளவர்களாக இருந்தா லுமே, 12 வயதுக்குட்பட்ட குழந் தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப் பாலூட்டும் பெண்கள் இந் த செயற்கை சர்க்கரையை எடு த்துக் கொள்ளக் கூடாது.
மற்றவர்களும் ஒரு நாளைக்கு 2 அல்லது3 செயற்கை சர்க்கரை மாத்திரைக்கு மேல் எடுத்துக்கொ ள்ள வேண்டாம் என்று நிபுணர் கள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் செயற்கை சர்க்கரையை அதிகமாக உபயோகிப்பதனால் ஒற்றைத் தலைவலி, மனஅழுத்தம், குழப்ப ம், கண்பார்வை குறைபாடு, புற்று நோய் போன்றவை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர். மேலும் செயற் கை சர்க்கரையினால் சுவாசக் கோளாறு, தோல் அரிப்பு போன்ற வைகளும் ஏற்படுமாம்.
சர்க்கரைக்குப் பதில் சுத்தமான தேன், கருப்பட்டி அல்லது பனை வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். அதுவும் கூட அளவுக்கதிகமாக எடுத்துக் கொள்வதும் சரியல்ல. மேலும் நீரிழிவுநோயினால் பாதிக் கப்பட்டவர்கள் தேன், கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்துக் கொள்வ து உகந்ததல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையினால் . . .

Posted On July 22,2012,By Muthukumar
குறட்டை சாதாரணமானதா அல்லது ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea ) என்கிற பிரச்னையா என்பதைப் பொருத்தே, அதற்கான சிகிச்சை கள் இருக்கின்றன. அதனால், குறட் டையின் தன்மையைக் கண்டுபிடிப் பதற்கு ‘ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் பரி சோதனை முறையை முதலில், மே ற்கொண்டாக வேண்டும். குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையி னால், மூச்சு ஓட்டம் தடைபடுகிற தா? மூளைக்குச் செல்லும் ஆக்சிஜ ன் அளவு குறைகிறதா? இதயத் துடி ப்பில் பாதிப்பு ஏற்படுகிறதா? இப்படி யான கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான விடையைச் சொல்வது தான் ‘ஸ்லீப் ஸ்டடி’!   
இந்தப் பரிசோதனை மூலம் ‘ஸ்லீப் ஆப்னியா பாதிப்புக்கு உள்ளான வர் ஆரம்பக்கட்ட (Mild Sleep Apnea) நிலையில் இருக்கிறாரா அல் லது ஆபத்தான கட்டத்தில் இருக் கிறாரா என்பதைக்கண்டுபிடித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்க முடியும். உடல் பருமனா க இருந்தால், உடற்பயிற்சிகள் மூலம் உடலை இளைக்க வைப் பது; தைராய்டு பிரச்னை உள்ளவ ர்களுக்கு அதற்கான மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்வது; மது மற்றும் புகைப் பிடி ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவராக இருந்தால், அவற்றைக் குறைத்துக்கொள்ளச் செய் வது போன்றவை முதல் கட்ட பொது சிகிச்சை முறைகள். ஸ்லீப் ஆப்னியா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு அறு வை சிகிச்சை முறை ஒன்று உள்ளது.
அறுவை சிகிச்சை என்றதும் பயப்பட வேண்டாம். தொண்டைக் குழி ப் பகுதியில், மூச்சுக் குழாய் பாதையின் அளவைப் பெரி தாக்குவதற்கான ‘மைனர் ஆபரேஷன்’தான் இது. லேசர் முறையில் செய்யக்கூடிய இந்த அறுவை சிகிச்சையை வெளிநோயாளியாக வந்தே செய்து கொள்ள முடியும். இ து தவிர சிறப்புப் பல் மருத்து வரின் (Prostho dentist) ஆலோசனையோடு செய்துகொள்ளக் கூடிய ‘ஓரல் அப்ளை யன்ஸ்’ (Oral Appliance)சிகிச்சை முறையும் உள்ளது. இதன்படி ஸ்லீப் ஆப் னியா பாதிப்பு உள்ளவரின் தாடை அளவைக் கணக்கெடுத்து வாயி னுள் பொருத்திக்கொள்ளக் கூடிய அளவில் க்ளிப் ஒன்றைத் தயார் செய்வார்கள்.
இரவில் தூங்கும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொள்ளக்கூடிய இந்த க்ளிப்பை வாயினுள் பொ ருத்திக்கொண்டால், கீழ்த்தா டையானது முக அமைப்பில் இருந்து சிறிது முன்நோக்கி நக ர்ந்த நிலையில் இருக்கும். இத னால், தொண்டைப்பகுதி- குரல் வளைப் பாதையின் அளவு சிறி து விரியும். அதனால், குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல் லாமல் போய்விடும். தேவைக் கு ஏற்றாற்போல் இந்த க்ளிப்பின் ஏற்ற இறக்க அளவுகளைச்சரிசெய் து அணிந்து கொள்ளக்கூடிய இந்தச் சிகிச்சை முறை மிகவும் எளி தானது.
ஸ்லீப் ஆப்னியா பாதிப்பு தீவிரமான நிலையில் இருப்பவர்கள் தூங் கும் சமயங்களில், ‘சிபாப்’ (CPAP – Continuous Positive Airway Pressure)  எனப்படும் முகமூடியை (விணீsளீ) அணிந்துகொள்வது தான் சிறந்த வழி. முகத்தில் பொருத்திக்கொள்ளும் இந்த முகமூடி யில் இருந்து தொடர்ச்சியாக அழுத்தமான நிலையில் காற்று வெளி வந்துகொண்டே இருக்கும்.
தண்ணீர் செல்லும் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் பலமா க காற்றை ஊதும்போது அடைப்பு நீங்கிவிடுகிறது அல்லவா? இந்த இயற்பியல் தத்துவ அடிப்படையில் இயங்குவதுதான் சிபாப் முக மூடி. ஆனால், சிபாப் கருவியில் இருந்து வெளிப்படும் காற்றா னது நமது மூச்சு ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ற அழுத்தத்துடன் வெ ளிவருவதால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயல்பாக மூச்சுவிட முடிவதோடு குறட்டைத் தொல் லைப் பாதிப்பும் விலகும். இந்த முக மூடியை அணிந்துகொண்டு தூங்கி யவர்களின் அனுபவத்தைக் கேட் டால், ‘இவ்வளவு நிம்மதியாக ஆழ் ந்த நிலையில் என்னாலும் தூங்கி எழ முடியும் என்பதை இப்போது தான் உணர்கிறேன். தூங்கி எழுந்து மறுநாள் ரொம்பவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்’ என்றெல்லாம் ஆச்ச ரியப்பட்டுப் பேசுவார்கள்.
தூக்கத்தின்போது சீரான மூச்சு ஓட்டம், மூளைக்குச் செல்லும் ஆக் சிஜன் அளவு குறையாதது போன்ற காரணங்களால், நிம்மதியானத் தூக்கம் கிடைப்பதோடு காலையில் எழும்போது நல்ல புத்துண ர்வும் ஏற்படும். தவிர, ஸ்லீப் ஆப்னியா பாதிப்பின் விளை வாக ரத்தக் கொதிப்பு மற்று ம் சர்க்கரை அளவுகள் கூடி அவஸ்தையை அனுபவித் தவர்களுக்கும் அந்த நோய்களின் தீவிரம் குறையும்.
‘சரி…. ஸ்லீப் ஆப்னியா பாதிப்பு இருப்பவர்களுக்கு மட்டும்தான் பகல் வேளையில் தூக்கம் வருமா?’,  ’மதிய சாப் பாட்டு வேளைக்குப் பின்னரான குட்டித் தூக்கம் நல்லதுதானா?’ என நீளும் கேள்வி களுக்கானப் பதில்களை அடுத்த இதழில் சொல்கிறேன்….
- ஆராரோ ஆரிராரோ
‘வாழ்க்கை முழுவதும் சிபாப் மெஷினோடு தான் தூங்கி ஆகணுமா?’
அப்படி அல்ல… உடல் பருமனால் ஸ்லீப் ஆப் னியா பாதிப்பு வந்திருந்தால், உடல் பருமன் குறைகிற வரையிலும் அணிந்துகொள்ள வேண்டியிருக்கும். அதேபோல், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை முடிகிற வரையிலும் இந்த முகமூடியை அணிந்து கொள்ளவேண்டி இருக்கும்… அவ்வளவுதான். சுருக்கமா கச் சொல்வது என் றால், ஒவ்வொருவருக் கும் ஸ்லீப் ஆப்னியா ஏன் ஏற்பட்டது என்ற தனிப்பட்ட காரணத்தைப் பொருத்தே சிகிச்சை முறையும் பின்பற்றப்படுகிறது.
மருந்து – மாத்திரைகளால் சரிசெய்ய முடியாத சூழல்களில், கண் பார்வைக் குறைபாட்டுக்கு மூக் குக் கண்ணாடி அணிவதுதான் சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. அந்த வகையில், மருந்து – மாத்திரைகளால் குண ப்படுத்தக்கூடிய பிரச்னையாக ஸ்லீப் ஆப்னியா இல்லை என்ப தால், சிபாப் முகமூடி அல்லது அறுவை சிகிச்சை போன்ற சிகி ச்சை முறைகள்தான் இன்றைய மருத்துவத் தீர்வுகளாக இருக்கி ன்றன.

தாம்பத்யத்தில் தன்னம்பிக்கை அவசியம்…

Posted On July 22,2012,By Muthukumar
புதிதாக திருமணம் முடிந்து சில வருடங்கள் வரை கணவரின் அருகிலேயே இருந்து அவருக்கு தேவையானவைகளை பார்த்து பார்த்து கவனிப்பார்கள் இல்லத்தரசிகள். அப்புறம் குழந்தை பிறந்த உடன் குடும்பத்தில் வேலை அதிகரிக்கும். இதனால் கணவரை சரியாக கவனிக்காமல் டீலில் விட்டுவிடுவார்கள். இதனால் குடும்பத்தில் சிக்கல்கள் எழுகிறது. கணவரின் கவனம் திசைமாறுகிறது. இதை தவிர்க்க, குடும்பத்தில் கணவர், குழந்தைகளிடையே பேலன்ஸ் செய்யவும், மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவதற்கும் பெண்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.
தேங்கிப் போகாதீர்கள்
பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை தேக்கமடைய விடாதீர்கள் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். தாம்பத்ய உறவு வெறும் சடங்காக மாறிவருதாக உணரத் தொடங்கினால் அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.
அழகாய் உணருங்கள்
சுயமரியாதையில்தான் தன்னம்பிக்கை தோன்றுகிறது. உடலைப் பற்றி கவலைப்படாமல், அதிக ஆர்வமில்லாமலும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷயங்களைச் செய்யுங்கள்.அழகு நிலையம் சென்று அழகுபடுத்திக்கொள்ளலாம். கூந்தலில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.
உங்களை உணருங்கள்
கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். உடலில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலுணர்வு சிந்தனை பொங்கட்டும். உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கை பெண்கள்
தாம்பத்ய உறவின் போது செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.
சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள்.வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.
மகிழ்ச்சிப் படுத்துங்கள்
படுக்கையறையில் எதைப்பற்றியில் கவலைப்படாமல் அமைதியாக இருக்கவேண்டாம். எப்பொழுதுமே உங்களவர்தான் தொடங்கவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். `அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.
மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், தாம்பத்யத்திலும் வெளிப்படும்.

`கொழுப்பு’ நல்லது?

Posted On July 22,2012,By Muthukumar

`கொழுப்பு' என்றாலே பயப்படுபவர்களுக்கு ஓர் இனிய செய்தி- `கொழுப்புச் செல்களில் உள்ள ஒரு மரபணு, சர்க்கரை நோயில் இருந்து காக்கிறது' என்கிறார்கள் விஞ்ஞானிகள். சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தலைமையிலான ஒரு குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதில், பொதுவான கருத்துக்கு மாறாக, உடம்புக் கொழுப்பானது நன்மையே செய்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உடம்பின் திறனை ஊக்குவிக்கிறது என்று கண்டறியப்பட்டது.
ஆய்வாளர்கள் கூறும் chREBP மரபணு, குளூக்கோஸ் சர்க்கரையை `பேட்டி ஆசிட்களாக' மாற்றுவதன் மூலமும், இன்சுலினுக்கான நுண்ணுணர்வை ஊக்குவிப்பதன் மூலமும் `டைப் 2' சர்க்கரை நோயை எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வயதில் உடல் பருமன் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பொதுவாக `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
``எல்லா கொழுப்பும் தீமையானது என்ற பொதுவான கருத்து உண்மையல்ல. உடல் பருமன் என்பது மோசமான உடலியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. அதுதான் ஒருவருக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், குண்டான பலருக்கு உடலியல் செயல்பாடுகள் ஆரோக்கியமாகவே இருக்கின்றன'' என்று ஆய்வுக் குழுத் தலைவர் டாக்டர் மார்க் ஹெர்மான் கூறுகிறார்.
உடல் பருமனானவர்களைப் பொறுத்தவரை, சர்க்கரையானது கொழுப்பு செல்களில் நுழைவது தடுக்கப்படுவதால் அதன் அளவு மிகவும் அதிகரிக்கிறது. ஆனால் ஆய்வகத்தில், குண்டான எலி ஒன்றில் குளூக்கோஸை கடத்தும் ஜீன் அளவை அதிகரித்தபோது, அதன் மூலம் மேலும் அதிக சர்க்கரை கொழுப்புச் செல்களில் அனுமதிக்கப்படுவதும், அதன்மூலம் சர்க்கரை நோயிலிருந்து எலி காக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. குளூக்கோஸை கடத்தும் ஜீன்கள் இல்லாத சாதாரண எடையுள்ள எலிகளில் நாளடைவில் சர்க்கரை நோய் அறிகுறிகள் ஏற்பட்டதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
கொழுப்பு குறித்த தற்போதைய கண்டுபிடிப்பு முக்கியமானது என்று உற்சாகமடைந்துள்ள ஆய்வாளர்கள், மேலும் இதுதொடர்பான தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.