திங்கள், 20 ஏப்ரல், 2015

உலர்திராட்சை



நாட்டு மருந்து கடைகளிலும் மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கக் கூடியதுமான உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை, நமது ஆரோக்கிய த்திற்கு ஏற்ற‍
உணவாகவும் பயன்படுகிறது. அத்தகைய ஒரு பயனைத்தான் நீங்கள் கீழே பார்க்க‍விருக்கிறீர்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாற்றினை விழுங்கினால், நமது உடலில் உள்ள‍ எலும்பு மஞ் ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
மேலும்  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக