செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நல்ல எண்ணெய்


நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன.
இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர், காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை, எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.
குறிப்பாக, பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டுமாம். மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை, நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
நவ நாகரீகம் என்கிற பெயரில், இதையெல்லாமல் மறந்ததன் விளைவால் தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை, நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால், கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் இதோ:
அடர்த்தியான முடி வளரும்: நல்லெண்ணெய் குளியலின் மூலம், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.
உடல் சூட்டை தணிக்கும்: நல்லெண்ணெய் கொண்டு, வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
பொலிவான சருமம்: எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சீரகம்


ணவுக்கு மணமூட்டியாக அடுப்பங்கரையில் இருப்பது சீரகம். மருந்தாக இருக்கும் பல மூலிகைகளை விருந்து படைக்கும் பொருளாக்கி, ‘உணவே மருந்து! மருந்தே உணவு!’ எனும் சூத்திரத்தைச் சோற்றுக்குள் புதைத்த மேதைகள் நம் சித்தர்கள். பார்க்க அவ்வளவு வசீகரம் இல்லாமல், கொஞ்சம் அழுக்காக, அப்படியே சாப்பிட்டால் லேசான கசப்பாக, உலர்வாக இருக்கும் சீரகம் ஒரு மிகச் சிறந்த மருந்து. அகத்தைச் சீர்படுத்துவதால் இதற்குச் சீரகம் (சீர்+அகம்) எனப் பெயர் வந்தது.
“போசனகுடோரியைப் புசிக்கில் நோயெல்லாமருங் காசமிராதக் காரத்திலுண்டிட”  என, சித்த மருத்துவ இலக்கியமான தேரன் வெண்பாவில், சீரனா நோயெல்லாம் வாராது காக்கும் போசனகுடோரி எனப் போற்றப்பட்டது சீரகம். பித்த நோய்களுக்கெல்லாம் முதல் மருந்தாகப் போற்றப்பட்ட சீரகம், அஜீரணம், கண் எரிச்சல், சைனசிடிஸ், வாந்தி, விக்கல், கல்லடைப்பு எனப் பல நோய்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘எட்டுத் திப்பில் ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகும்’ என, விடாதிருக்கும் விக்கலுக்கு, 8 திப்பிலியும் 10 சீரகமும் பொடித்துத் தேனில் கலந்து கொடுத்தால் போதும் என்கிறது சித்த மருத்துவம்.
உணவு செரிமானம் ஆகாமல் எதிர்த்துக் கொண்டுவரும் நிலையில் (GERD), சாதாரண தண்ணீருக்குப் பதில், உணவருந்துகையில் இளஞ்சூட்டில் சீரக நீர் அருந்துங்கள். “சாப்பிட்ட கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வயிறு ஆறு மாதக் கர்ப்பிணி வயிறு போல் வீங்கிக்கொள்கிறது” என வருத்தப்படுபவருக்கு சீரகம் ஒரு அருமருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இள வறுப்பாக வறுத்துப் பொடி செய்து, உணவுக்குப் பின் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட, இந்தப் பிரச்னை தீரும்.
சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட, எரிச்சலுடன் கூடிய அல்சர் நோய் தீரும். சீரகத்தை தனித்தனியே கரும்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு ஊறிய சீரகத்தை, மிக்ஸியில் அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். இந்த சீரகச் சூரணம், பித்தத் தலைவலி எனும் மைக்ரேனுக்கு, பித்தத்தால் அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிறந்த துணை மருந்து. “எங்க போயி டாக்டர், இவ்வளவு சடங்கு சாங்கியமெல்லாம் பண்றது?” எனக் கேட்கும் நபர்களுக்கு, ‘சீரகச் சூரணம்’ என்றே சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. அந்தச் சூரணத்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
இஞ்சியை தோல் சீவி, சில மணித் துளிகள் ஈரம் போகும் மட்டும் உலரவைத்து, அதே அளவுக்குச் சீரகத்தை எடுத்து, இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டின் கூட்டு அளவுக்குச் சமமாக, நாட்டுச் சர்க்கரை கலக்க வேண்டும்.  இந்தக் கலவையை அரை டீஸ்பூன் அளவுக்கு காலை வேளையில் சாப்பிட, மைக்ரேன் படிப்படியாகக் குறையும்.
சீரகத்தையும் வில்வவேர்க் கஷாயத்தையும் சேர்த்து சித்த மருத்துவர்கள் செய்யும் சீரக வில்வாதி லேகியம் பித்த நோய்கள் பலவும் போக்கும் மிக முக்கிய மருந்து. சீரகம், பித்தத்தைச் சீர்படுத்தும் மருந்து. எனவே, உளவியல் நோய்க்கும்கூட ஒரு துணை மருந்தாக இதைப் பயன்படுத்த முடியும். நவீன ஆய்வுகளில் சர்க்கரை நோய் உருவாக்கப்பட்ட எலிக்கு சீரகத்தைத் தொடர்ந்து கொடுக்கையில், சர்க்கரை நோயின் முக்கிய பின் விளைவான கண்புரை நோய் (காட்ராக்ட்) வருவது தாமதப்
படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீரகத்திலுள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.
ஆதலால், பொங்கலோ, பொரியலோ, இனி சீரகம் இல்லாமல் இருக்க வேண்டாம். ஏனென்றால் கிடைப்பது மணம் மட்டுமல்ல… மருத்துவமும்கூட!
உலகை ஆளும் சீரகம்!
உலகின் மூத்த மணமூட்டியான சீரகம், கிரேக்கத்திலிருந்து உலகெங்கும் பரவியது. சீரகத்தின் பிரத்யேக மணத்தின் காரணமாக, கிரேக்கத்தில் வரிக்குப் பதிலாக சீரகம் செலுத்தலாம் எனும் அரசாணை அந்தக் காலத்தில் இருந்ததாம். இன்று, சீரகம் மணமூட்டி மட்டும் அல்ல. உலகை ஆளும் ஒரு மருத்துவ உணவு (Functional food). நம்ம ஊர் ரசம், வடக்கின் மலாய் கோஃப்தா, டச்சு நாட்டின் சீஸ் உணவு, மெக்ஸிகோவின் பரிட்டோஸ், மொரோக்கோவின் ரஸ்-எல்-ஹேனோ என உலகின் அத்தனை கண்டங்களின் சிறப்பு உணவுகளிலும் சீரகம் மணம் தந்து நோய் ஓட்டும் மருந்தாக இருக்கிறது.
பஞ்ச தீபாக்னி சூரணம்
குழந்தைகள் சாப்பிட மறுத்து அடம்பிடித்தால், சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம் இவற்றைச் சம பங்கு எடுத்து, நன்கு மையாகப் பொடிசெய்து, சம அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து, பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிடும் முன்னர், இரண்டு முதல் நான்கு சிட்டிகை தேனில் குழைத்துக் கொடுக்க, நேரத்துக்கு பசியைத் தூண்டி, ஆரோக்கியமும் பேணும் இந்த அற்புத சூரணம்.

சனி, 18 ஜூலை, 2015

நாள் தவறாமல் பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால்



நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்க லாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் சமீபத்தில்
றிவித்துள்ளது. வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும்.
மேலும், பசியை தூண்டிவிடுகிறது என்றும் ஆய்வாளர் கள் நிருபித்துள்ளனர். பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்தஅளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

வியாழன், 18 ஜூன், 2015

சுக்கில சுரப்பி நோய்

Posted By Muthukumar,On June 18,2015

சிறுநீரகங்கள், சிறுநீர் குழாய்கள், சிறுநீர்ப் பை, ஆண் குறி, சிறுநீர் வடிகுழாய் ஆகிய உறுப்புகள் உடலில் தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதற்கு உதவுகின்றது.
சிறுநீர்ப்பை அலர்ஜி, சிறுநீர் வடிகுழாய் தொற்று, சிறுநீரகங்களில் தொற்று போன்றவை பொதுவாக பெண்கள் மத்தியிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இருப்பினும் ஆண்களுக்கும் இத் தொற்று ஏற்படலாம். இது சில சமயம் சுக்கில சுரப்பியின் (Prostate gland) கடுமையான நோய்கள் சிலவற்றுக்கான அறிகுறிகளாகவும் தோன்றலாம்.
ஆண்களில் காணப்படும் Urethritis பொதுவாக பாலியல் உறவின் மூலமாகவே ஏற்படுகின்றது. பெரும்பான்மையான தொற்றுக்கள் சிறுநீரகங்கள், சிறுநீரகப்பை, சிறுநீர் குழாய்கள் போன்றவற்றையே அதிகமாக தாக்குகின்றன. இவற்றை சிறுநீர் தொற்று என கூறப்படுகின்றது.
Escherichia வாலையே 85% மான சிறுநீர் பாதைத் தொற்று ஏற்படுகின்றது. Chlamydia யாவும் சிலசமயம் சிருநீர்ப் பை பிரச்சனைகளுக்கு காரணமாக அமையலாம்.
Cystitis, Pyelonephritis, Urethritis போன்ற தொற்றுக்கள் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக வரக்கூடிய சாத்தியமுண்டு. ஏனென்றல் மலவாசல், கருப்பைவாய்க் குழாய், சிறுநீர் வடிகுழாய் என்பன நெருக்கமாக இருப்பதுடன், பெண்களின் சிறுநீர்வடிகுழாய் சிறியதாகவும் காணப்படுவதால் மலவாய், கருப்பை வாய், சிருநீர்வடி குழாய்க்கு மிக இலகுவாக பாக்டீரியா தொற்றி விடுகிறது.
ஆகவே, இரு பாலரும் சிறுநீர் குழாய் பராமரிப்பில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கோடை காலங்களில் மிகவும் கவனம். சிறுநீரை அடக்கும் பெண்கள் அதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது, சிறுநீரை அடக்காமல் வெளியேற்றுவது, பழச்சாறுகள், இளநீர் ஆகிய பானங்களை பருகுவது ஆகியவற்றை முறையாக பின்பற்றினால் சிறுநீர் குழாய் சிக்கல்களில் இருந்து எளிதில் தப்பலாம்.

கர்ப்ப கால நம்பிக்கைகள்


ர்ப்ப காலத்தில், வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை, தொடர்ந்து வாந்தி வந்தால், குழந்தைக்குத் தலை முடி அதிகமாக இருக்கும் என்று பல்வேறு நம்பிக்கைகள் இன்றும் மக்கள் மத்தியில் உள்ளன. இந்த நம்பிக்கைகளில் எந்த அளவுக்கு உண்மை?
வயிறு பெரிதானால்  பெண்குழந்தை?
வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்றும், சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் கூறுவார்கள். வயிறு பெரிதாக தெரிவதற்கு, உடல் பருமன், குழந்தையின் எடை, அதன் அளவு, பனிக்குட நீரின் அளவு என, பல காரணங்கள் உள்ளன. கருவின் சருமத்தைப் பாதுகாக்கும் தன்மைகள் பனிக்குட நீரில் உள்ளன.இதனுடன் கருவின் சிறுநீரும் கலந்திருக்கும். சர்க்கரை நோய் இருக்கும் தாயின் வயிற்றில், பனிக்குட நீர் சற்று அதிகமாகவே இருக்கும். இதனால், வயிறும் பெரியதாகத் தெரியும். பெண், ஆண் என்ற பாலினத்தைவைத்து, வயிற்றின் அமைப்பு மாற வாய்ப்பு இல்லை. குழந்தையின் எடை இரண்டரை முதல் மூன்று கிலோ வரை இருக்கலாம். இதற்கு மேல் எடை இருந்தால், வயிறு நிச்சயம் பெரியதாகவே தெரியும். 
பிரசவ வலி எடுத்து சீக்கிரம் பிறந்தால் ஆண் குழந்தையா?
எனது அனுபவத்தில் 80 சதவிகித பிரசவங்களில் வலி வந்த பிறகு தாமதிக்காமல் சீக்கிரம் பிறக்கும் குழந்தைகள் ஆண் பிள்ளையாகவே இருந்தன. பிரசவ வலி எடுத்தும் நீண்ட நேரம் கழித்துப் பிறக்கும் குழந்தைகள், பெண் குழந்தைகளாகவே இருந்தன. அனைவருக்கும் இந்தக் கருத்து பொருந்தும் என்று சொல்ல முடியாது. இதற்கானக் காரணங்கள் சரியாகத் தெரியவில்லை.
தாய் சுகபிரசவம் ஆகியிருந்தால்மகளுக்கும் சுகபிரசவம்தான் நடக்குமா?
அந்தக் காலத்தில் சுகப்பிரசவம் ஆகியிருந்த தாயின் உடல்நிலை, உணவுமுறை, வாழ்வியல் முறை வேறு. இன்று இருக்கும் பெண்களின் வாழ்வியல் முறை வேறு. மரபு ரீதியாக சுகபிரசவத்தைப் பொருத்திப்பார்க்க முடியாது. இன்றைக்கு சிசேரியன் செய்யப்படும் பெரும்பாலான பெண்கள் சுகப்பிரசவத்தில் பிறந்தவர்கள்தான்.
கர்ப்ப காலத்தில் இடது பக்கம்தான் படுக்கவேண்டும்
கர்ப்ப காலங்களில் இடது பக்கம் படுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பார். இடது பக்கம் படுக்கும்போது, சீரான ரத்த ஓட்டம் குழந்தைக்குச் செல்லும். ஒரே பக்கம் படுத்து, கஷ்டமாக உணரும் சமயத்தில், கொஞ்சம் நேரத்துக்கு மாறி வலது பக்கம் படுக்கலாம். குப்புறப் படுத்தாலோ, மல்லாக்கப் படுத்தாலோ குழந்தைக்குச் செல்லும் ரத்த ஒட்டம் குறைந்து, பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தாயின் உடலில் உள்ள ரத்த நாளங்களின் மேல் குழந்தையின் எடை விழுந்து, தாய்க்கும் பாதிப்புகள் ஏற்படும். இடது பக்கம் படுப்பதே குழந்தைக்கும், தாய்க்கும் பாதுகாப்பு. இடது பக்கம் படுக்கச் சொல்வது மூட நம்பிக்கை அல்ல. அறிவியல்பூர்வமான உண்மை.
தாயின் முகம் பொலிவாக இருந்தால், பெண் குழந்தையா?
முகத்தின் பொலிவுக்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் சம்மந்தம் இல்லை. கர்ப்ப காலத்தில் தாயின் மகிழ்ச்சியான உணர்வே, முகம் பிரகாசிக்கக் காரணம். கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்ற எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால் முகம் மலர்ச்சியுடன்தான் இருக்கும்.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும்.
குங்குமப்பூ சாப்பிடலாமா என்று 10-ல் எட்டு பெண்கள் கேட்கின்றனர். அதில், இரும்பு சத்துக்கள் நிறைந்திருப்பதால், ரத்த உற்பத்திக்கு உதவும். சிவப்பு நிறத்தில் அம்மா, அப்பா இருந்தால் குழந்தையும் அதே நிறத்தில் பிறக்க வாய்ப்புகள் உண்டு. நிறத்தை நிர்ணயிப்பது பெற்றோர்களின் ஜீன்களே. சருமத்தின் நிறத்துக்குக் காரணம் மெலனின் என்ற நிறமி மட்டுமே. குங்கமப்பூ இல்லை.
பப்பாளி, அன்னாசி பழத்தைச் சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?
ஒரு முழு பப்பாளியையும், அன்னாசியையும் யாரும் சாப்பிடப் போவது இல்லை. ஒரு துண்டு என்ற கணக்கில் பழங்களைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. கருவைப் பாதிக்காது. அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம். ஆனால், அளவுடன் சாப்பிடுவது முக்கியம்.
அடிக்கடி வாந்தி எடுத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிக முடி இருக்குமா?
கருவுற்றதன் விளைவை எதிரொலிக்கும் வகையில் சிலருக்கு வாந்தி, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்னைகள் இருக்கும். ஒவ்வொருவரின் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் அளவைப் பொறுத்து இது மாறுபடும்எனச் சொல்லலாம். குழந்தையின் முடிக்கும் வாந்தி வருவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

செவ்வாய், 9 ஜூன், 2015

சில ப‌ழங்களும் – பல பலன்களும்!



ப‌ழங்களும் அவற்றின் பலன்களும் – ப‌ழங்களும் அவற்றின் பலன்களு ம்
பழங்கள்- இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில், நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால், அன்றாட உணவில், ஏதாவது ஒரு பழத்தையு ம் சேர்த்து கொண்டால் நல்லது என்கிறது, மருத்துவ
ஆராய்ச்சி முடிவுகள். எந்தெந்த பழங்களில் என்னென் ன பலன்கள் உள்ளன என்பதற்கு, இதோ சில டிப்ஸ்:
எலுமிச்சை
✔ அதிகமான பேதி ஏற்பட்டால், ஒரு எலுமிச்சைபழத் தின் சாறை, அரை டம்ளர் நீரில் கலந்துகொடுத்தால், உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப் பை போக்க, எலுமிச்சை பழத்தை கடித் து, சாற்றை உறிஞ்சி குடித்தால், உடனே களைப்பு தீரும்.
✔ கபம் கட்டி, இருமலால் கஷ்டப்படுகிறவர், ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந் து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளி யாகி நலம் ஏற்படும்.
திராட்சை
✔ பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு, திராட்சைசாறு ஒரு சிறந்த மருந்து. தள்ளிப் போதல், குறை வாகவும், அதிகமாகவும்போதல் போன்ற குறைபா டுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில், சிறிது சர்க்கரை சேர்த்து, தினமும் வெறும் வயி ற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடை வெளியில் மாதவிலக்கு வெளியாகும். தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
பேரீச்சை
✔தினமும், இரவில் படுக்க செல்லு ம்முன் , ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீச்சம் பழத் தையும் உண்டுவந்தால், உடல்பல ம் பெறும். ரத்த விருத்தியும் உண் டாகும்.
✔ தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்க, தினமு ம் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். கண் சம்பந்தமான கோளாறுகளும், நரம்பு சம்பந்தமான கோளாறு களும் நீங்கும்.
ஆரஞ்சு
✔ ஆரஞ்சில் வைட்டமின் ஏ, வைட்டமி ன் சி, பி மற்றும் பி-2 உள்ளன. இதில், சுண்ணாம்புச் சத்தும் அதிகம். பலநாள் வியாதியில் இருந்து எழுந்தவர்களுக் கு, இது இயற்கை அளித்த சத்து மருந் து.
✔ இரவில் துாக்கமில்லாமல் கஷ்டப்ப டுபவர், படுக்க போவதற்கு முன், அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட்டால், செமையாக துாக்கம் வரும்.
வாழை
✔ மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர், தின மும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், ஜீரண சக்தி உண்டாகும்.
✔ கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், தி னசரி உணவில்செவ்வாழை ப் பழம் வேளைக்கு ஒன்று வீதம், 21 நாட்களுக்கு கொ டுத்து வந்தால், பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெ ளி வடைய ஆரம்பிக்கும்.
பலா
✔ இதில் வைட்டமின் ஏ மற்றும் உயிர்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையு ம். வைட்டமின் ‘ஏ’க்கு, தொற்று கிருமிக ளை அழிக்கும் சக்தி இருப்பதால், உடலில் நோய் தொற்றாது.
பப்பாளி
✔ ஆண்டு முழுவதும் கிடைக்கக் கூடியது. பல் தொடர்பான குறை பாட்டுக்கும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி உதவும். நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை அதிகரிக்கவும், ரத்த விரு த்தி உண்டாகவும், ஞாபக சக்தியை பெருக் கவும் பப்பாளி கை கொடுக்கும்.
✔ பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக் கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து உள்ளது. பப்பாளி பழம் சாப் பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமி கள் தங்குவதை அது தடுத்து விடும்.
மாதுளை
✔ மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கு ம் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர், தொடர்ந்து மூன்று நாள் மாதுளம் பழம் சாப்பிட் டால், குணம் பெறலாம்.
✔ வறட்டு இருமல் உள்ளவர் தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் இருமல் குண மாகும். பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கும் மாதுளம் பழம் ஏற்றது.
கொய்யா
✔ எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கும். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்ப வர்கள் கொய்யாப்பழம் உண்பது நல்லது. விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்தி ற்கு இருப்பதால், வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால், அதை உடனே கொன்று விடும்.
அன்னாசி
✔ உடலில் போதிய ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு, அன்னாசிப்பழம் சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன் னாசி பழத்தை, சிறுசிறு துண்டுகளா க செய்து வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து, தின மும் இரவில் ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து பருக வேண்டும்; 40 நாட்க ளில் ரத்தம் அதிகரித்திருக்கும்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க



உடலில்அதிகமான அசதி. எந்தசெயலை செய் ய வேண்டுமானாலும், பிறகு செய்துகொள்ள லாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற் சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்ப தற்கு கூட எழுந் துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப் பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவே ண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய
சோம்பேறித்தனம். இந்த நிலையில் தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.
இந்த நிலைமையை நீக்க, மருத்து வரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிட லாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும்செய்து, அந்த பரிசோதனைகள் அ னைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோ குளோபின் குறைவாக இருக்கிற து என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையு ள்ள மாத்திரைகளையும், மருந்துக ளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டா லும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ள தேதவிர, மறுபடியும் பழைய நிலை யில் பாதிகூட சரியாகவில்லை.
நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவ தும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள்சுறுசுறுப்பாக இயங்கமுடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்ய வேண்டிய வேலையை இருவர் செய்வார்க ளானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வ ளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உட லில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளு ம் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
நமது உடல் அதற்கு தேவையான சத்துக்க ளை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொ ள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்தளவு மட்டும் உறிஞ்சி எடுத்து க்கொண்டு, மீதி உள்ளவற்றை கழி வுபொருட்களாக உடலிருந்து வெ ளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதி யை கழிவுப் பொருட்களாக தள்ளி விடுகிறது.
ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவி லும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே கு றையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், ம ற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோ குளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதி க்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோ பின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொ ழுது, உடல் மெலி ந்து, களைப்பு, இய லாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கி ன்றன.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிக ரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தி ன்போது நுரையீரலுக்குச்சென்று நா ம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறு கிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன் னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெ ளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட் டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண் டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழ ங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலு க்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கி றது.
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திரா ட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழ ங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழ ங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழு வதும் ஊற விடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கிவிட்டு, காலை ஒருபழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம்ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாகஉள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியு ங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்க ளை தின்றுவிட்டு, பழம் ஊறியநீரை குடியுங்கள்.
ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடு த்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணி க்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலை யில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங் கள்.
மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணி க்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடி யுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.
1-வது நாள் 1, 1, 1, -3.
2-வது நாள் 2, 2, 2, = 6.
3-வது நாள் 3, 3, 3, = 9.
4-வது நாள் 4, 4, 4, = 12.
5-வது நாள் 4, 4, 4, = 12.
6-வது நாள் 4, 4, 4, = 12.
7-வது நாள் 3, 3, 3, = 9.
8-வது நாள் 2, 2, 2, = 6.
9-வது நாள் 1, 1, 1, = 3.
ஒன்பதுநாட்கள் செய்துமுடித்தபிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்க ள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில்ஹீமோ குளோபின்கள் திருப்தியான அளவில் உய ர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.
உடலில்உற்சாகம்பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய் து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத் தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக் கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோ குளோபினை அதிகரிக்கலாம்.

ஞாயிறு, 31 மே, 2015

இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . .



இரவில் இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால் . . .பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பல இயற்கை பொருட்களில் அரிய மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் ஏனோ
அவற்றை புறந்தள்ளுகிறோம். இந்நிலை மாற வேண்டும்.

சிலருக்கு தண்ணீரில் அதிகநேரம் இருந்தால், அவர்களுக்கு சேற்றுப்புண் வந்துவிடும். பின்மாதக் கணக்கில் அது ஆறாமல் தீராத தொல்லைக் கொடுத்து, அவர்களது நிம்ம‍தி கெடுத்து, ஆரோக் கியத்தையும் பாதிக்கும்.
ஆனால் சாதாரணமாக கிடைக்க‍க்கூடியதும், பெண்கள் தங்கள் கை கால் களில் அழகுக்காக வைத்துக்கொள்ளும் மருதாணி இலை யை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து இரவில் படுக்கும்போது . அந்த சேற்றுப்புண்ணில்  பற்று போடவும். அடுத்த‍ நாள் காலை எழுந்ததும் வெதுவெதுப்பான தண்ணீரில் உங்களை காலை நன்றாக கழுவ வேண்டும். இரவில் இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்து வந்தால், சேற்றுப்புண் உங்களிடம் தோற்று ஓடும் என்ன‍ புரியலையா சேற்றுப்புண் விரைவில் குணமாகும்.

ஞாயிறு, 24 மே, 2015

உடல்சூடு தணிக்கும் கல்யாண முருங்கை!



தோட்டங்களில் வேலி மரங்களாக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரத்தின் இலைகள், அதிக மருத்துவக் குணங்கள் கொண்டது. அகன்றும் பெரிதுமாக இருக்கும் இதன் இலைகள், துவர்ப்புச் சுவை கொண்டவை.

கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சீரான இடைவேளைகளில் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுவலி, வாந்தி, பித்த சுரம், வாய்ப்புண், உடல் சூடு ஆகியவை நீங்கி, உடல் வலுப்பெறும். இந்தக் கீரையை நன்றாக அரைத்து, கீரை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்.
ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்து, காலை மாலை இரு வேளையும், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
இரண்டு அவுன்ஸ் கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும். இது வயிற்றுப்போக்கைக் குணப்படுதச் சிறந்த மருந்து.
பெண்கள், கல்யாண முருங்கை இலை ரசத்தைத் தொடர்ச்சியாகக் காலை மற்றும் மாலை வேளைகளில், தலா இரண்டு அவுன்ஸ், இரண்டு அல்லது மூன்று  மாதங்கள் தொடர்ந்து உண்டுவர, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். உடல் பருமன் குறையும், மலட்டுத்தன்மை நீங்கும்.
பாலூட்டும் தாய்மார்கள், தேங்காய்ப்பாலுடன் கல்யாண முருங்கை இலையைச் சமைத்துச் சாப்பிட்டால், பால் நன்கு சுரக்கும்.
ஒன்றிரண்டு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றை, காலை, மாலை இருவேளையும் உண்டுவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையும் நீங்கும்.
கல்யாண முருங்கை இலையை அம்மியில் நசுக்கி, மேகநோயால் ஏற்படும் அரையாப்புக்கு (நெறி கட்டுதல் முதலான பிரச்னைகள்) வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை இலையை, ஒன்றிரண்டாய் நறுக்கி, வெந்நீர் சேர்த்து, பொறுக்கும் சூட்டில் மூட்டை சுற்றிக் கட்டினால், மூட்டு வாத நோயால் ஏற்படும் வலி நீங்கும்.
கல்யாண முருங்கை இலை சாற்றைக் காதில் விட, காதுவலி நீங்கும். பல் வலி இருக்கும் இடத்தில் இலைச்சாற்றை விட்டால் பல் வலிநீங்கும்.
கல்யாண முருங்கைக் கீரையை வாரத்துக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளி, 8 மே, 2015

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்ட‍தா?

 


சில அற்புதத் தகவல்கள்
30 வயதைத் தொட்டவரா நீங்கள்? உங்களை பற்றிய சில அறிவியல் தகவல்கள்
30 வயது காலக்கட்டம் என்பது மனிதவாழ்வின் சிறந்தகாலமாக கருதப்படுகின்றது. 20களில் அனுபவித்த பொருளாதார பிரச்சனை, 40 மற்றும் 50 களில் அனுபவிக்கப்போகும் பொறுப்புகள் ஆகியவற் றை ஒப்பிடுகையில் 30 களில் வாழ்க்கை நிம்மதியானது என்றுதான் சொல்ல வேன்டும். இதிலும் குறி ப்பாக, 35 வயதே மிக சிற ந்த வயதாகவும், உண்மை யான மகிழ்ச்சி 33 வயதி லிருதான் ஆரம்பிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. 30களில் உள்ளவர்களுக்கான சில அறிவியல் தகவல் களை இங்குப் பார்ப்போம்.
30களில் ஒருமனிதன் தன் மாற்றத்திற்காக முடிவெ டுக்கிறான்
வேலைமாற்றம், இடமாற் றம், வாழ்க்கை துணை யை தேர்ந்தெடுத்தல் போ ன்ற பல முக்கிய முடிவுக ளை ஒரு மனிதன் தன் 30களில் தான் எடுக்கிறான் என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம், 20 களின் தன் வாழ்க்கை பாதையை சரி வர படித்து விட்ட இவர்கள், தங்களின் மாற்றத்திற்காகவும் மன திருப்திக்கா கவும் பல முடிவுகளை அப்பொழுது தான் எடுக்க ஆரம்பிக்கின்றனர் என லாம். அதுமட்டுமின்றி, தங்கள் வாழ் க்கையில் மாற்றங்கள் ஏற்பட வேண் டும் எனும் துடிப்பு 30 வயது தொடக்க த்தில் மிகுதியாக காணப்படும் எனக் கூறப்படுகிறது.
30களில் காம உணர்வு மிகுதியாக இருக்கின்றது
30களில் ஒரு மனிதனின், குறிப்பாகப் பெண்களின் காம உணர்ச்சி மிகுதியாக க்காணப்படும் என ஆய்வுக ள் கூறுகின்றன. முக்கிய மாக 31 வது வயதில் பெண் கள் உடலுறவில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். இதனால், அவர்கள் உடல் ரீதியாக, 20களைக் காட்டிலும் அதிக கவர்ச்சியுடன் இருப்பதாகவும் உணர்கின்றனர்.
30களில் வேலை மற்றும் பொருளா தார வெற்றியின் உச்சியில் இருப்பீர் கள்
20 வயதில் பெரும்பாலும் படிப்பில் கவனம் செலுத்தவும் மற்றும் முதல் வேலையில் அமரவும் போராட்டம் நடத்தியிருப்பீர்கள். வேலையில் சே ர்ந்தவுடன் உங்கள் உழைப்பை போட்டு, படிப் படியாக முன்னேறி, ஒரு நல்ல பதவியை அடந்திருப்பீர்கள். 30 வயதை தொடு ம்போது, உங்கள் போராட்டங்கள் ஒரு வழியாக ஓய்து, பொருளா தார வளர்ச்சியை அனுபவிக் க ஆரம்பிப்பீர்கள். அதுமட்டு மின்றி, 30களில், 40 மற்றும் 50களைக்காட்டிலும் பொறுப் புகள் குறைவாக இருக்கும். இக்காரணங்களினால் உங்க ள் வாழ்க்கையை மகிழ்ச்சி யாக வாழ்வீர்கள்.
30களில் உங்கள் தனித்தன்மைகளில் அதிக மாற்றங் கள் வருவதில்லை
30 வயதுக்கு பிறகு, ஒரு மனிதனின் பழக்க வழக்கங்க ள் அவனிடம் அட்டை போல் ஒட்டி கொள்ளும் என சொல்லப்படுகிறது. நமது குணங்கள் குழந்தை பருவத் தில் உருவாக ஆரம்பித்து, 20களில் அனுபவம் மூலமா க மாற்றங்கள் அடைந் து, 30 வயது தொடக்கத் தில் முழுமையடைகிற து. இதனால், 30 வயதுக் கு பிறகு, நம் குணங்கள் பக்குவ நிலையை அ டைந்து, மாற்றங்கள் ஏ ற்படும் சாத்தியங்களை க் குறைக்கின்றது. மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது மற் ற காலக்கட்டங்களை காட்டிலும் மிக குறைந்த அள வே நிகழ்கின்றது.
30களில் உங்களுக்கும் மனச் சோர்வு ஏற்படும்
மனிதனின் ஒவ்வொரு காலக் கட்டமும் சோதனைகள் நிறை ந்தது. அதே போல், உங்கள் வேலையோ அல்லது திரும ண வாழ்க்கையோ நீங்கள் விரும்பியதுபோல் அமையாவிடில் அது உங்களை ம னச்சோர்வுக்கு ஆளாக்கி விடும். இருப்பினும், உங்கள் வயதின் பக்குவத்தினால் உங்கள் பிரச்சனைகளில் முடங்கி கிடக்காம ல், அதற்கான தீர்வை சீக்கிரமே அடை ந்து விட்டு, வாழ்க்கையின் முன்னேற் றத்தை நோக்கி செயல்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
30களில் உண்மையான மகிழ்ச்சி ஆரம்பமாகிறது
30 வயதின் ஆரம்பங்களில் ஏற்படும் சோதனைகளை தீர்த்தப்பின், வாழ்க்கை இன்பமயமாய் மாறி விடுகிறது. பெரும்பாலும், 33 வயதில் 70 விழுக்காட்டினர்வேலை மற்றும் வாழ்க் கையின் சமநிலையான வாழ்க்கையை வாழ்ந்து, 38 வயதுகளில் மன நிறைவாக வாழ்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்ற ன. அது மட்டுமின்றி, அவர்கள் வாழ்க்கை யை பற்றிய தெளிவான, முன்னோக்கு பார் வையும் கொண்டுள்ளனர் எனக் கூறப்படு கிறது.