வெள்ளி, 26 செப்டம்பர், 2014

குழந்தைக்கு ஒவ்வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சிப் படிகள்!


தாய்மார்களே! கர்ப்பிணிகளே! கவனிக்க – உங்க குழந்தை, ஒவ் வொரு வயதிலும் ஏற்படும் முதிர்ச்சிப் படிகள்! (நிலைகள்) கடக் கும்!

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர் பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும்.
உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட
காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.
இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வய திற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது.
அதாவது ஒரு எட்டு மாதக் குழந்தையின் வளர்ச்சி எல்லையானது(mile stone) தவழப் தொடங்குதல் .
இவ்வாறு மனிதனின் வளர்ச்சி எல்லை நான்கு முக்கிய பிரிவுகளில் நடைபெறு கிறது.
அசைவு சம்பந்தமான வளர்ச்சி (தவழு தல், நடத்தல், ஊடுதல்)(GROSS MOTOR) சமூகத்தோடு ஐக்கியமாகும் வளர்ச்சி( சிரித்தல், கையசைத்தல், ) (SOCIAL)
நுணுக்கவேலைகள் மற்றும் பார்வை (FINE MOTOR)
பேச்சு மற்றும் செவிப்புல வளர்ச்சி (SPEECH AND HEARING )
இந்த இடுகையில் முதலாவது பிரிவில் ஏற்படுகின்ற வளர்ச்சிப்படிமுறைகளை பார்ப்போம்.
தலைய நேராக வைத்திருத்தல் (head control ) —– 4 மாதம்
குழந்தை உடம்பை சுழற்றுதல்(குப்புறப் படுத்தல்) —- 3 – 6 மாதம்
துணையாக நாம் பிடித்துக் கொள்ளும் போது இருத்தல் —–5 மாதம்
எந்தத் துணையும் இல்லாமல் இருத்தல் ——- 6மாதம்
தவழுதல் ——– 8மாதம்
எழுந்து நிற்றல் ——– 9மாதம்
பிடித்துக்கொண்டு நடத்தல் —-10 மாதம்
துணையின்றி நடத்தல் —–12 மாதம்
ஓடுதல் ——– 15மாதம்
ஒரு பந்தை உதைத்தல் ——–24மாதம்
மூன்று சக்கரங்களைக்கொண்ட வண்டியை மிதித்தல் —–36மாதம
மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
அசைவு சம்பந்தமான செயற்பாடுகள்
தலையை நிமிர்த்தி வைத்திருக்கும் திறன் .
குப்புறப்படுத்திருக்கும்போது தலை மற்றும் நெஞ்சினை உயர்த்துதல
அசையும் பொருள் அல்லது நபர்க ளை தொடர்ச்சியாக பார்த்தல்
உணர்ச்சி மற்றும் சிந்தனை சம்ப ந்தமானவை
ஒலி வரும் திசையை நோக்கி தலையைத் திருப்புதல்
நீங்கள் ஒலி எழுப்பி விளையாட்டுக் காட்டுவதை உணர்ந்து ரசித்த ல்
நீங்கள் சிரிக்கும் போது பதிலுக்குச் சிரித்தல்
ஆறு மாதக் குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தமானவை
இருத்தி வைக்கும் போது தலையை நேராக வைத்திருத்தல்
தூரத்தில் இருக்கும் விளையாட்டுப் பொருட் களை எட்டிப் பிடித்தல்
சூப்பிப் போத்தலைப் பிடித்து பால் குடிக்க முயற்சித்தல்
விளையாட்டுப் பொருட்களை ஒரு கையில் இருந்து இன்னொருகைக்கு மாற்றுதல்
தானாக எழுந்து இருத்தல் உடம்பை உருட்டிக் கொண்டே அசைதல்
உணர்ச்சி மற்றும் எண்ணம் சம்பந்த மானவை
சாப்படைக் கொடுக்க, போகும் போது வாயைத் திறத்தல்
மற்றவர்கள் செய்யும் சிறிய செயல்களை திருப்பிச் செய்ய முயற்சித் தல்
பேச்சு
நெருக்கமானவர்களின் முகங்க ளை அறிந்து கொள்ளுதல்
தொந்ததரவுக்கு உள்ளாகும்போது அழுதல்
கண்ணாடியில் தன் முகத்தையே பார்த்து சிரித்தல்
ஒரு வயதுடைய குழந்தையின் திறன்கள்
அசைவு சம்பந்தப்பட்டது
சூப்பியில் இருந்து கோப்பையினால் குடிக்கப் பழகுதல்
சிறிய உணவுத்துண்டுகளை தானாக வே எடுத்து வாயில் வைத்துச் சாப்பிடு தல்
துணையின்றி சில அடிகள் நடத்தல்
உணர்ச்சி சம்பந்த பட்டவை
மற்றவர்கள் செய்யும் செயற்பாடுகளை தானும் செய்ய முயற்சித்தல்
இசையை கேட்டு சிறிய உடல் அசைவு களைக் காண்பித்தல்
தூரத்தில் உள்ள விளையாட்டுப் பொரு ட்களை தேடித் போய் விளையாட முயற்சித்தல்
பேச்சு
அம்மா அப்பா தவிர்ந்த வேறு ஒரு வார்த்தையை பேசத் தொடங்கு தல்
வீட்டில் உள்ள மற்றவர்களின் பெயர்க ளை அறிந்து கொள் ளுதல் மற்றவர்க ளோடு பேச முய ற்சித்தல்
வீட்டில் உள்ளவர்களோடு நெருக்கமாகப் பழகி வெளியாட்களோடு அன்னியத்தைக் காண்பித்தல்
பெரியவர்கள் சொல்லும் சிறிய சிறிய கட்டளைக ளை உணர்ந்து கொள்ளுதல்

பானை போன்று வயிறு வர ஆரம்பிக்கிறதா?

Posted By Muthukumar ,On September 2014

இன்றைய காலத்தில் வீட்டில் சமைத்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைவு. மாறாக கடைகளில் பார்த்ததும் சாப்பிடும் வண்ணம் சுவையாக இருக்கும் உணவுப் பொருட்களான பிட்சா, பர்கர், சாண்ட்விச் போன்றவற்றை உட்கொண்டு வருவதோடு, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளை அதிகம் உட்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்களின் உடலில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களானது அதிகரித்து, உடல் பருமன் அதிகரித்து தொப்பை வர ஆரம்பிக்கிறது. பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க… இப்படியே தொடர்ந்தால், எழுந்து நடக்க முடியாத அளவில் போவதோடு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் விரைவில்
வரக்கூடும். ஆகவே உடல் பருமன் அதிகம் இருந்தால், முடிந்த அளவில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, வீட்டிலேயே கலோரி குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்… குறிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி செய்து, உண்ணும் உணவில் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்து வந்தால், உடல் பருமன் குறையும். இங்கு கலோரி குறைவாக இருக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பிடித்ததை சமைத்து சாப்பிட்டு வாருங்கள். காளானில் வைட்டமின் டி மற்றும் செலினியம் அதிகம் நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டால் மன அழுத்தம் குறைந்து, நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் இதில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், இவற்றை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் நிறைந்திருப்பதால், இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய இதர சத்துக்களான வைட்டமின் கே, பொட்டாசியம் போன்றவையும் கிடைக்கும். மேலும் உடல் எடையும் குறையும். அஸ்பாரகஸில் கலோரிகளே கிடையாது. மேலும் இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட. அதுமட்டுமின்றி, அஸ்பாரகஸில் உடலுக்கு வேண்டிய வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் நிறைந்துள்ளது. தர்பூசணியிலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தர்பூசணி மிகவும் சிறப்பான உணவுப் பொருள். ஆகவே இதனை தினமும் ஸ்நாக்ஸ் நேரத்தில் உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும். சாலட் செய்யும் போது, அதில் மறக்காமல் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தக்காளியில் உள்ள லைகோபைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. அதிலும் இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், இவற்றை உட்கொண்டு வந்தால், விரைவில் வயிறு நிறைந்துவிடும். செலரியில் கலோரிகள் சுத்தமாக இல்லை. மேலும் இதில் வைட்டமின் கே போதிய அளவில் நிறைந்துள்ளது. அத்துடன் இதில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதுவும் அடிக்கடி பசி எடுப்பதை தடுத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும். இந்த சூப்பர் உணவுப் பொருளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதிலும் கலோரிகள் இல்லாததால், இதனை தினமும் உணவில் சிறிது சேர்த்து வருவது மிகவும் சிறந்தது. சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. எனவே சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை சேர்த்து வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, கலோரிகள் இல்லாததால் உடல் எடையும் குறையும். குடைமிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இதனையும் உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். பரங்கிக்காயில் நீர்ச்சது அதிகம் இருப்பதுடன், வைட்டமின்களும், இதர சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கலோரிகளும் இல்லை. ஆகவே எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான உணவுப் பொருள். பச்சை இலைக் காய்கறிகளான பசலைக்கீரை, கடுகு கீரை, கேல் போன்றவற்றில் வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து அமிகம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்து வந்தால், தொப்பை வருவதைத் தவிர்க்கலாம். 

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

உடலுறவின் போது ஆண்களின் பங்கு!


பாலுறவின் போது ஆணின் பங்கு அதிகம்ஏனெனில் உறவின் போது ஆணின் உறுப்பு வலு பெற்று திடமானதாக மாறி சில நிமிடங்கள் நிலைத்தி ருந்து பெண்ணின் உள்சென்று அங்கு சில நிமிடங்கள் இருந்து உச்சக் கட்டத்தையும், சந்தோஷத்தை யும்கொடுத்து பின்புதானும் உச் சத்தை அடைந்துபின் விந்தை வெளியிட்டுவெளியேற வேண்டிய பல சிக்கலான கடமையு ம்செயல்பாடும் ஆணுக்கே உரித்தானது. ஆனால் பெண்ணை ப் பொறுத்த வரை அப்படியல்ல தேவையோதே வையில்லை யோ சம்மதித்தால்மட்டுமே போ
துமானது நடந் தேறிவிடும். நடத்தும்கடமை ஆணுடையது.
வயது ஏற ஏற பல ஆண்கள் இதில் தவறி விடுகின்றனர். ஏதோதோ சாக்குப்போக் குகளை சொல்லிக் கொ ண்டு காரணங்களை கண் டுபிடித்துக்கொண்டு கால த்தை வீணடிக்கின்றனர். பெரும்பாலும் இவற்றிற் கு ஆண்கள் சொல்லும் காரணங்கள்- மது, சர்க்க ரை நோய் (நீரிழிவு), மன அழற்சி, டென்ஷன் போன்றவை வயது வரம்பு இன்றி வயது குறைந்த ஆண்கள் பலரும் இப்பிரச்சனையால் கஷ்டப்படுகி ன்றனர். அதே சமயம் வயது முதிர்ந்த ஆண்க ளும் பலர் இன் னும் இள மையுடனும் உற்சாகத் துடன் தங்கள் துணவிய ரின் அன்போடு வாழத் தான் செய்கிறார்கள். இத ற்கு வயது ஒரு பொருட் டேயல்ல. வயதானவர்க ளும் வலுவாக உள்ளனர். வயது குறைவாக உள்ளவர்களும் வலுவிழந்து நிற்கின்றனர். இ தற்கு என்ன காரணம். இதற்கு பல காரணங்கள் இருக்கலா ம்.
பெரும்பாலான ஆண்கள் பா திக்கப்படுவது விறைப்பின் மையால்தான். இதனைத் தமிழில் நரம்புத்தளர்ச்சி என்றும் ஆண்மைக்குறைவு என்றும் பல வாறு பல்வேறு வார்த்தைகளில் பலரும் விளக்கமளித்து விட்ட னர். இதனை சரியான வகையி ல் புரிந்து கொள்வது அவசியம்.
ஆண்மைக்குறைவு எனும் விறைப்பின்மை இரண்டு கார ணங்களால் ஏற்படலாம். ஒன்று உடல் ரீதியான கோளாறு ம ற்றொன்று மனம் ரீதியான கோளா று.
உடல் ரீதியான கோளாறுகள் ஆண் உறுப்புகளுக்குச்செல்லக்கூடிய நுண் ணிய நரம்புகள் பாதிப்படைவதால் ஏற்படுவது. இதனால் கிளர்ச்சி மூ ளையைச் சென்றடையாமல் அதன் காரணமாக உறுப்புக்குள் இரத்தம் செலுத்தப்படாமல் விறைப்பு ஏற்படா து போவது, இதற்கு காரணங்களாக அமைவது சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு, வயது முதிர்வு, சிறுவயதில் அதிக கைப்பழக்கம் மற்றும் தண்டு வடத்தில் ஏற்படும் அடி அல்ல து கீழே விழுந்து காயப்படுவ து போன்றவையாகும்.
மன ரீதியான கோளாறுகள் அதிகமான ஆண்களுக்கு இது தான் ஏற்படுகின்றது. அதாவது அவர்கள் மனதளவில் முடியா து நம்மால் முடியாது என்று எண்ணுவதால் அவர்களால் முடியாமல்போவது அதே ஆண்களால் தனியாக இருக்கு ம் பொழுதும் இரவில் தூங்கு ம் பொழுதும் விறைப்பு அடை ய முடியும். ஆனால் உறவு என்று வந்தால் விறைப்படைய முடியாது. இது உடல் ரீதியான பிரச்சனை. இதனை சூழ் நிலையால் ஏற்படும் ஆண்மை க்குறைவு என்று கூறலாம்.
வயது
வயதிற்கும் ஆண்மைக்குறை விற்கும் சம்பந்தமுண்டு என்று ம் வயது ஏற ஏற ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் என்றும் ஒரு எண்ணம் பரவலாக உ ள்ளது இது முற்றிலும் உண்மை அல்ல. ஓரளவிற்கே இது உண்மையாகும். சில ஆண்களில் வயது ஏற ஏற ஆண் ஹார்மோ ன்களில் சுரப்பு குறைந்து கொண் டேவரும். அதனால் சில ஆண்க ளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட லாம். ஆனால் அவ்வாறு உள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவு ம் குறைவு. வயது முதிர்ந்த ஆண்களின் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், மற்றும் சுக்கிலவக பெ ருக்கம் போன்றவற்றாலு ம் ஆண்மை க்குறைவு ஏற்படலாம்.
சிலர் உபயோகிக்கும் இர த்த அழுத்த மருந்துகள், சர்க்கரை நோய் மருந்து கள், மன அழுத்த மருந்து கள் போன்றவற்றாலும் கூட இது ஏற்பட வாய்ப்புள்ளது. பலருக்கு மது, புகை, பாக்கு, ஜர்தா, பான், பீர், புகையிலை போன்றவற்றாலும் கூட இது ஏற்படலாம்.
ஆரோக்கியமாக இருக்கும் ஆ ண்கள், நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மனைவியை உடை ய ஆண்கள், குறைவான மது மற்றும் புகைப்பழக்கம் உடைய ஆண்கள், வசீகரமான ஆண்கள் , வாழ்க்கையில் வெற்றிகரமான ஆண்கள் ஆகி யோருக்குபெரிதும் இந்த ஆண்மைக் குறைவு ஏற்படுவதில் லை.
மருத்துவம்
ஆங்கில மருத்துவத்தில் இதற் கு பல வகையான மருந்துகள் உள்ளன. ஆனால் எவை நாள டைவில் செயல் இழந்து விடும் வாய்ப்பு உள்ளது. அதே சம யம் அது நாள் ஆக ஆக அதிக அளவிலும் தேவைப்படலாம்.அதே சமயம் தொடர்ந்து உப யோகிக்கும் பொழுது அது பல பக்க விளைவுகளையும் கண்ட றியப்பட்டுள்ளது. எனவே ஆங்கி ல மருந்துகளைத் தவிர்ப்பது நன்று.
ஆயுர்வேதம்
ஆயுர்வேத முறையில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல மரு த்துவ குணம் உள்ள செடிகள், கொடிகள், பூக்கள், காய்கள், வேர்கள், மரப்பட்டைகள் ஆ ண்மைத் தன்மையை அதிக ரிப்ப தாகக் கண்டறியப்பட்டு வந்துள்ளது. இவ்வகை மூலி கைகளை அனுபவ ரீதியாக வும், தேவைக்கேற்பவும் பய ன்படுத்தி வர நல்ல பலன்களைத் தரக் கூடியவை. பொதுவா கவே நாற்பது நாற்பத்தைந்து வயதைக் கடக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு வகையான மாற் றம் ஏற்படுகின்றது. பெண்களு க்கும் கூட புழை வறட்சி, புழை இறுக்கம், மாதவிடாய் மறையு ம் வேளை, புணர் புழை அழற்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போலத்தான் ஆணின் உடலிலும் ஒருவிதமான பலஹீனம், சோர்வு, வெறுமை, நரம்புத்தளர்ச்சி போ ன்றவை ஏற்படுகின்றன.
எனவே நாற்பது வயதைக் கடந் த இருபாலரும் உற்சாகமளிக்கு ம் ஊக்க மருந்துகளைப் பயன்ப டுத்துவது நன்மையே தரும். இ த்தகைய ஊக்கமளிக்கும் உன்னத மூலிகைகள் சிறப்பாக கே ப்சூல் வடிவில் கிடைக்கின்றன. இதற்கு உபயோகிக்கக்கூடிய மூலிகைகள், அமுக்கிரா , பூனைக்காளி, சாலா மி சிறி, முருங் கை வித்து, முருங்கை பிசின், நிலை ப்பனைக் கிழங்கு, குறுந் தொட்டி, அக்கிரகாரம், எட்டி விதை, குங்கும ப்பூ போன்றவை ஆகும். இவ ற்றை தனி மூலிகைகளா கவும் கூட்டு மூலிகைகளாகவும் அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். தேவை க்கேற்ப என ஒரிருநாட்கள் மட்டு ம் உபயோகிக்காமல் தொடர்ந்து உபேயாகிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சக்தியை யும் தேஜனையும் வள ங்கிடும்.
அஸ்வகந்தா – அமுக்கிரா – பத னிடப்படுத்தப்பட்ட சுத்திகரிக் கப்பட்ட தனி மூலிகைப் பொடி யாகக் கிடைக்கின்றது. இது பக்குவ ப்படுத்தப்பட்ட மூலிகைப்பொடி இதர மூலிகைப் பொடிகள் போல தயாரி க்கப்படாமல் முறையாக தயாரிக்கப் பட்டது நல்ல பலனளிக்கக் கூடியது இதனை தினசரி இரவு ஒரு தேக்க ரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகலாம். நீரிழிவு உடைய வர்கள் தண்ணீரில் கலந்து பருகலா ம்.. ஆண் பெண் இருபாலரும் உப யோகிக்கலாம். பக்க விளைவு இல் லை பாதுகாப்பானது. மூலிகைமட்டு மே அடங்கியது நீண்ட நாட்கள் உபயோகிக்க உகந்தது.

சனி, 6 செப்டம்பர், 2014

ஆளி விதை சாப்பிடுங்க… நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க..


undefined
ஆரோக்கியமாக சாப்பிடுதல் மற்றும் வாழுதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத் வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வரும் இந்த காலத்தில், ஆளி விதைகளை (Flax Seeds) தங்களுடைய உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். இந்த சிறிய, பழுப்பு நிற விதையில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்திருக்கின்றன. நமது வாழ்வியல் முறையால் வரக் கூடிய பல்வேறு நோய்களில் இருந்து தீர்வு தரும் விஷயமாக ஆளி விதை உள்ளது. உடலுக்கு
ஆரோக்கியத்தைத் தரும் 20 வண்ணமயமான உணவுகள்!!! ‘நல்ல கொழுப்பு’ என்று அழைக்கப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளதாலும், ஆக்சிஜன் எதிர்ப்பு பொருட்கள் உள்ள லிக்னன்களும், ஈஸ்ட்ரோஜன் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதாலும் ஆளி விதை மிகச் சிறந்த நிவாரணப் பொருள் என்பதில் ஐயமில்லை. இந்த கட்டுரையில் ஆளி விதையால் தீர்வு காணக் கூடிய சில நோய்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். நீரிழிவு 2 ஆம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் திறன், ஆளி விதையில் உள்ள லிக்னன்களுக்கு உள்ளது. தினந்தோறும் சிறிதளவு ஆளி விதைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை நெடுங்காலத்திற்கு முறையாக பராமரிக்க முடியும். நீரிழிவு நோயை தடுக்கும் முறைகளை அறிய மேலும் படியுங்கள். இதய நோய் ஆளி விதையிலுள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்கள் எரிச்சலுக்கு எதிரான குணம் கொண்டிருப்பதால், இதயத்தை இலகுவாக வைத்திருக்க உதவுகின்றன. இரத்த அழுத்தத்தின் விளைவுகளை குறைக்கவும் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படச் செய்யவும் ஆளி விதைகள் உதவுகின்றன. தமனிகளில் கறைகள் ஏற்படுவதையும் மற்றும் தமனிகள் கடினப்படுவதை குறைக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன. ‘LDL’ அளவு அல்லது ‘மோசமான கொழுப்புகளை’ முறையாக பராமரிக்கவும் ஆளி விதைகள் உதவுவதால் நீரிழிவு, உடற்பருமன் மற்றும் இதய நோய் போன்றவற்றிற்கு உற்ற தீர்வாக ஆளி விதை உள்ளது. புற்றுநோய் ஆளி விதையில் நிறைந்திருக்கும் ஆக்சிஜன் எதிர் பொருட்களும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் காலன் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கும் அரண்களாக உள்ளன. ஹார்மோன்களை தூண்டக் கூடிய தன்மையுள்ள கட்டிகளிலிருந்தும் (Tumours) ஆளி விதையில் உள்ள லிக்னன் பொருள் பாதுகாக்கிறது. எடுத்துக்காட்டாக, மார்பகங்களில் உள்ள கட்டிகள். இதோ புற்றுநோய் பற்றி பொதுவாக கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் மருத்துவ வல்லுநரின் பதில்கள். எரிச்சல் ஆளி விதையின், ஆல்பா லினோலெனிக் அமிலம் என்ற பொருளுடன் சேர்ந்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் மற்றும் லிக்னன்களும் கூட்டாக சேர்ந்து எரிச்சலுக்கு எதிரான செயல்பாடுகளை திறமையுடன் செய்கின்றன. இவை எரிச்சலை ஏற்படுத்தும் காரணிகளை தடுக்கும் பணியை செய்து வருகின்றன. இது குறிப்பாக, ஆர்த்ரிடிஸ் மற்றும் பர்கின்சன் நோயால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கும். ஹாட் ப்ளாஷ்கள் மாதவிடாய் பருவத்தில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக ஹாட் ப்ளாஷ் உள்ளது. ஒரு தேக்கரண்டி ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்த பிரச்சனை வருவதை குறைத்திட முடியும். இந்த வழிமுறையை பயன்படுத்திய பெண்களில் 57 பேருக்கு ஹாட் ப்ளாஷ் பிரச்சனை ஏற்படுவதும் மற்றும் அதன் தீவிரமும் குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. ஆளி விதையில் உள்ள ஆக்சிஜன் எதிர்பொருட்களின் குணம் ஹார்மோன் சமநிலையற்ற தன்மையை வரைமுறைப்படுத்துவதால், ஹாட் ப்ளாஷ் பிரச்சனை குறைகிறது என்று நம்பப்படுகிறது. இதோ மாதவிடாயை எதிர்கொள்வதற்கான சில டிப்ஸ்கள். உணவில் ஆளி விதைகளை சேர்த்துக் கொள்ள டிப்ஸ் தினமும் காலையில், வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு ஆளி விதை பொடியை சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன் அளப்பரியதாக இருக்கும். மாறாக, இந்த விதையை அரைத்து சக்தி மற்றும் புத்துணர்வூட்டும் சாறாகவும் குடிக்கலாம். இதனை சமைக்கும் போது சேர்த்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் தயாரிக்கும் உணவின் மேல் ஒரு தேக்கரண்டி ஆளி விதை பொடியை தூவி விட்டால் போதும். இந்த பொடியை நேரடியாக சூடான எண்ணெயில் போட வேண்டாம். ஏனெனில், இந்த கலவை பயன்படுத்த ஏற்றதாக இருக்காது. அதிகபட்சமாக இருக்கும் வெப்பம், ஆளி விதையின் ஆரோக்கிய பலன்களை வெகுவாக குறைத்து விடும். எனினும், அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். என்னதான் ஆரோக்கிய பலன்களை கொடுத்தாலும், ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டிக்கு மேல் ஆளி விதைகளை சாப்பிட வேண்டாம் என்பது வல்லுநர்களின் கருத்தாகும்.