திங்கள், 31 மார்ச், 2014

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

வலிப்பு நோய்க்கு மாந்திரீகமோ, காத்து கருப்போ காரணம் அல்ல; சர்க்கரை நோய்; ரத்த அழுத்தம் போன்று, அதுவும் ஒரு நோய் தான். வலிப்பு நோய் வந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.
1. வலிப்பு நோய் என்றால் என்ன?
வலிப்பு நோயை, காக்காய் வலிப்பு என்று, மக்கள் அழைக்கின்றனர். இது, மூளை சம்பந்தப்பட்ட நோய். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும், மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக, ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், வலிப்பு வருகிறது.
2. இதற்கான அறிகுறிகள் என்ன?
நினைவிழந்து கை, கால், முகம் வெட்டி இழுத்தல், திடீரென சுய உணர்வின்றி கவனம் இழத்தல், நினைவிழந்து நின்ற இடத்திலேயே விழுதல், சிறிது நேரத்திற்கு மாறுபட்ட வினோத நடத்தைகள் செய்தல், சில நிமிடங்கள் கண் இமைக்காமல் விழித்தல், வாய் மெல்லுதல், உமிழ்நீர் துப்புதல், கைகளை பிசைதல் போன்ற, அறிகுறிகள் வரலாம்.
3. வலிப்பு நோய்க்கான காரணங்கள்?
மூளையில் அடிபடுதல், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி, நாடா புழுக்களால் ஏற்படும் கட்டிகள், காசநோய் கட்டி, கேன்சர் கட்டி, மூளைக்கு ரத்தம் குறைவாக செல்லுதல், சத்து மாற்றங்கள் (சர்க்கரை, உப்பு, அமிலங்கள்) மற்றும் பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் சுவாச அடைப்பு போன்றவை, இதற்கு காரணம். எவ்வித காரணம் இல்லாமலும், வலிப்பு நோய் வரலாம்.
4. இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
பெரும்பாலான வலிப்பு வகைகளை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும். இதற்கான மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன. டாக்டரின் பரிந்துரைப்படி, தேவைப்படும் வரை, மாத்திரைகளை தேவையான அளவிற்கு தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
5. சிகிச்சைக்கான காலம் ஏதும் உண்டா?
பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மூன்று, ஐந்து ஆண்டுகள் வரை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். சிலருக்கு நீண்ட காலம் தேவைப்படலாம். மாத்திரைகளை விட்டு விட்டு சாப்பிடுவதால் வலிப்பை கட்டுப்படுத்த முடியாது; அது தொடர் வலிப்பாகவும் மாறிவிடும்.
6. வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கு அறிவுரை…
திருமணம் செய்யவோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடையல்ல. பிரசவ காலங்களில், டாக்டரின் ஆலோசனைப்படி தகுந்த சில வலிப்பு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனையின்றி, எந்த மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது. வலிப்பு நோய் உள்ளோர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டக் கூடாது என்பது முட்டாள்தனம்.
7. வலிப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும்?
பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும். நோயாளியை ஒரு பக்கமாக, படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர், நுரை போன்றவை வெளியேறுவது, சுலபமாகும். இதனால், சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நோயாளியின் அருகில் உள்ள பொருட்களை, அகற்ற வேண்டும். இது, நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும். சிறு தலையணை, துணி மடிப்புகளை, தலைக்கடியில் வைக்கவும். அடிபட்டிருந்தாலோ, வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோ, நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோ, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
8. என்னவெல்லாம் செய்யக் கூடாது?
நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது; காற்றோட்டமான சூழல் மிக அவசியம். வாயில், பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது. கையில் சாவி, கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும். முழு சுய நினைவு வரும் வரை, குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.
9. வலிப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும், ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம், நன்றாக தூங்க வேண்டும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது. தொடர்ச்சியாக, அருகில் அமர்ந்து, ‘டிவி’ பார்க்கக் கூடாது. வேளை தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். பசியோடு இருப்பது கூடாது. புகைத்தல், மது அருந்தக் கூடாது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் போல, வலிப்பும் ஒரு நோய் தான். இது மாந்திரீகத்தாலோ, காத்து கருப்பாலோ வருவதல்ல. மூளை நரம்புகளின் மாறுபட்ட இயக்கத்தால் வருவது. இதற்கு மருத்துவ சிகிச்சை உண்டு. நோயாளிகள் சீராக மருந்து சாப்பிட்டு, தக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வலிப்பு வராமல் தடுத்து அச்சமின்றி வாழலாம்.

ஆண்களின் மலட்டுத் தன்மையைப்போக்கும் பச்சை உணவுகள்

ஆண்களின் மலட்டுத் தன்மையைப்போக்கும் பச்சை உணவுகள்

நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிக ரித்து வருகிறது. இதற்கு அறி யாமையும், நெருக்கடியான வா ழ்க்கை முறையையும் பின்பற் றி வருவதே காரணம் என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற நெருக்கடியான வாழ்க்கை மு றையால் ஆண்களிடம் மலட்டு த் தன்மை உருவாகி அவர்களுடைய துன்பங்கள் அதிகரிக்கி ன்றன. முறையற்ற உணவுமுறை மற்றும் மோசமான
வேலை நேரங்கள் ஆகிய வை ஆண்களுக்கு பெறும ளவு மன அழுத்தம் கொடு ப்பதுடன், அதன் தொடர்ச் சியாக அவர்களுடைய ஆ ரோக்கியத்திற்கு உலை வைக்கவும் செய்கின்றன. இந்த போட்டி நிறைந்த உலகத் தின் வேகத்தில், ஆண்கள் பலரும் தங்களு டைய அடிப்படை சுகாதாரத்தையும், அதன் காரணமாக வரு ம் மலட் டுத் தன்மையையும் பாதி ப்பதை உணருவதில்லை.
ஆரோக்கியமான வாழ்வுமுறை யையும், ஊட்டச்சத்து மிக்க உண வுகளை உட்கொள்ளுவதன் மூல மும் ஆண்கள் மலட்டுத் தன்மை யை தவிர்க்க முடியும். உடற்பயி ற்சியை தொடர்ந்துசெய்து வருவதால் உடலை உறுதிப்ப டுத்தி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தையும், சுகா தாரத்தையும் நிலை நாட்டமுடியும். புகைப்பழக்கமும் மலட் டுத்தன்மை வர முக்கியமா ன காரணமாக உள்ளது. புகைப்பழக்கத்தினால் மலட்டுத் தன்மையும், செய ல்பாட்டில் பயமும் ஏற்படு ம். மேலும், அதீதமான அள விற்கு ஆல்கஹால் குடிப்ப தும் மலட்டுத் தன்மையை உருவாக்கும். சில நேரங்களில் சுகாதார மற்ற உணவு, உயிரணுக்க ளின் தரம் மற்றும் அவற்றின் எண்ணி க்கை ஆகிய வற்றாலும் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது.
வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறை ந்திருக்கும் உணவை உட்கொள்வ தன் மூலம் மலட்டுத் தன்மையை குறைக்கவும், செயல்பாட் டை உத்வேகப்படுத்தவும் முடியும். வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை தரமா ன உயிரணுக்கள் அதிக எண்ணிக் கையில் உற்பத்தியாக உதவிசெய்கி ன்றன. இந்த வைட்டமின்களில் பெ ரும்பாலானவை பச்சைக் காய்கறிக ள், ஆரஞ்சு, தக்காளி, பீன்ஸ் போன் றவற்றில் கிடைக்கின்றன. இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர் ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்மை வரு வதை பெருமளவு குறைக்கமுடியும்.
கீரைகள்
உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின் கள் மற்றும் தாதுக்கள் பசுந் தழைகளில் பெருமளவு குவிந் துள்ளன. தாதுக்கள் நிரம்பிய தாகஉள்ள கேல், பசலைக்கீரை, ஸ்விஸ்சார்ட், கடுகு இலைகள் ஆகியவற்றில் உள்ள அவசியமான ஊட்டச்சத் துக்கள் மல ட்டுத் தன்மை யை குறைக்கவும் மற்றும் உயிரணுக்களின் திறனை அதிகரி க்கவும் செய்கின்றன.
கேரட்
கேரட் சாப்பிடுவது பார்வையை தெளிவுபடுத்த உதவுவதுமட்டுமல்லாமல், ஆண்களின் மலட் டுத் தன்மையை குறை க்கவும் உதவு கின்றன. கருமுட்டையை நோக்கி உயிரணுக் களை எடுத்துச் செல்லும் சத்துக்கள் கேரட்டில் மிகவும் அதி களவு உள்ளதாக ஹார்வார்டு பல் கலைக் கழகத்தின் பொது சுகாதார துறையினரின் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஆரஞ்சு
ஆண்களின் கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துவதில் அடர் வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரும் பங்கு வகிக்கின்ற ன. ஒவ்வொரு நிறகாய்கறி அல்ல து பழத்திற்கும் குறிப்பிட்ட வகை யான சுகாதார பலன்களும், கருத்த ரிக்கும் திறனை ஊக்கப்படுத்தும் சத்துக்களும் உள்ளன. ஆக்ஸி ஜன் எதிர்பொருட்களும், வைட்டமின் C-யும் நிரம்பியிருக் கும் ஆரஞ்சுகள் செயல்பாட்டு உத்வேகத்தையும், கருத்தரிக் கும் திறனையும் மேம்படுத்த பெருமளவு பயன்படுகின்றன.
தானியங்கள்
வெள்ளை ரொட்டிகள் அல்லது வெள்ளை அரிசிகளை தேர் ந்தெடுப்பதற்குப் பதிலாக முழு தானியங்களை உணவாக எடுத் துக் கொள்ளும்போது, அது இர த்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவில் நேர்மறையானவிளைவுகளை ஏற்படுத்தச்செய்கின்றது. உங்களுடைய இன் சுலின் முறையாக செயல்படும் போது, ஹார்மோன் அளவு கள் மிகவும் சமநிலையுடன் காணப்படு ம். இதன்மூலம் உங்களுடைய கருத்தரி க்கும் தன்மை அதிகரிக்கும்.
வெண்ணெய் பழம் மற்றும் பாதாம்
உங்களுடையஉணவுடன் வெண்ணெய்பழம் மற்றும் பாதா ம் கொட்டைகளை சேர்த்துக் கொள்வது நீண்ட கால அளவி ல் உங்களுக்கு மிகவும் உதவும். இந்த உணவுகளில் காணப்படு ம் கொழுப்புகள் உடலுக்கு மிக வும் ஏற்றவையாகும். இவை உங்கள் உடலில் உள்ள இன்சு லின் முறையாக செயல்படவும், அதன் மூலமாக ஹார்மோ ன்கள் சமநிலைப்படவும் உதவி செய்து, உங்களுடைய கருத்தரிக்கும் திறனை அதிகப்படுத்துகின்றன.
பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை
இயற்கையாகவே கருத்திரிக்கு ம் திறனை அதிகரிக்கும் போ லிக் அமிலம் நிறைந்திருக்கும் உணவுளாக பீன்ஸ் மற்றும் பச லைக் கீரை ஆகியவை உள்ள ன. ஆண்கள் தங்களுடைய உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க போலிக் அமிலம் தேவைப்படுகிறது. போலேட்  நிரம் பியுள்ள உணவுகளை அதி கம் உட்கொள்வதன் மூல மாக கருத்தரிக்கும் தன் மையை அதிகரிக்கும் போ லிக் அமிலம் இயற்கையா கவே கிடைக்கும்.
முளை கட்டிய தானியங்க ள் மற்றும் நாற்றுகள்
சமைக்காத காய்கறிகள் அல்லது நாற்றுகளில் உள்ளதை விட 100 மடங்கு அதிகளவிலான என் ஸைம்களை முளை கட்டிய தானியங் கள் கொண்டிருக்கின்றன. ஆண்களின் கருத்தரிக்கும் தன்மையை அதிகப்படு த்த ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், புரதங்களும் அதிகளவில் தேவைப்படு கின் றன.
ஸ்ட்ராபெர்ரி
சுவை மிக்க ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி மட் டுமல்லாமல், ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும் சத்துக்களும் உள்ளன. தங்க ளுடைய கருத்தரிக்கும் தன் மையை அதிகப்படுத்தநினை க்கும் ஆண்கள் தினமும் 90 கிராம் அளவிற்கு இந்த சத்து க்களை உட்கொள்ளவேண் டும்.